| | ஒருமன முடையனாய் மறலியும் வெருவ ஆற்றுவ னரும்போர். அதனிடை யமபுரம் ஏற்றுவ னெங்குலந் தூற்றிய சேரனை : |
| 160. | வென்றிடின் மீளுவன். அன்றெனிற் பண்டே அனையிலாத் தனையளுக் கம்மையு மப்பனுந் தயாநிதி! நின்றிருச் சரணமே யென்ன வியாகுல மறவே விடுவனென் னுயிரே. |
| சுந்தர, | | விடுகிலை, யாகினும் வெளிக்கட லோட்டம். |
| 165. | நடுநிசி நாமினி வருகுதும். கொடிய கடிபுரிக் கனலிடைக் காய்ந்திடு முன்றன் சிறுகொடி மறுவிடம் பெயர்த்துதும் சிறந்த அந்தமில் செழியரைத் தந்திட வுரித்தே. |
| ஜீவ, | | கட்டளைப் படியே? கட்டிய கற்படை |
| 170. | கண்டிட வாசையொன் றுண்டடி யேற்கு. |
| சுந்தர, | | காட்டுது மின்றிரா கற்படை சேர்முறை. ஒருவ ரொருபொரு ளறியி லிரகசியம் ; இருவ ரறிந்திடிற் பரசிய மென்ப. கைக்கெட் டியதுதன் வாய்க்கெட் டுதற்குள் |
| 175. | வந்துறு மந்தமில் பிரதிபந் தங்களே. |
| ஜீவ, | | வந்தனம். வந்தனம். அடிகாள்! வந்தனம். |
| (தனிமொழி) | | என்னே! என்னே! இந்நா ளியன்றவை! கொன்னே கழிந்தன் றோரிமைக் கொட்டும். குகுநாள் மழையொடு மிகுகாற் றெறிந்த |
| 180. | பரவையின் பாடெலாம் பட்டதென் னுளமே. இரவினில் வருபவை யெவையெலாங் கொல்லோ! தாயே! தாயே! சார்வன சற்றும் ஆயேன், எங்ஙனம் பிரிந்துயி ராற்றுவேன்? விடுக்குமா றெவனென் விளக்கே? உன்னைக் |
| 185. | கெடுக்குமா றெவனிக் கிளர்போ ரிடை?அது தடுக்குமா றெவனினி? சமழ்ப்பற் றுடலம் பொறுக்குமா றெவனிப்! பொல்லா வல்லுயிர் துறக்குமா றெவ னுனைத் துணையற விடுத்தே! |
|
|
|