பக்கம் எண் :

மனோன்மணீயம்
143

அந்தோ! அந்தோ! என்றன் தலைவிதி!
190.

நாற்புற நெருப்புறி னளியுந் தனது
வாற்புற நஞ்சால் மாய்ந்திடு மென்ப.
நரனலன் ; நரேந்திரன் ; நானது போற்சுதந்
தரனல னெனிலென் தலைவிதி கொடிதே!
பிரிவென வென்னுளங் கருதிடு முனமே

195.

பிரையுறு பாலென வுறைவதென் னுதிரம்.
நாணா துன்முகங் காணுவ தெவ்விதம்?
நடுநிசிப் பொழுது தொடுகற் படைவழி
முனிவரன் பிறகுனைத் தனிவழி விடுத்திவண்
தங்குவன் யானும்! தங்குவை நீயும்!

200.

இங்கதற் கிசையேன் இறக்கினும் நன்றே!

(மௌனம்)

கற்படை யிதுதா னெப்புறத் ததுவோ!
உரைத்திலர் முனிவர். ஒளித்தனர். இஃதும்
உளதோ? இலதோ? உணர்பவர் யாவர்?

205.

 .

முனமே முனிவன் மொழிமணம் அன்றோ
இனையவிப் போர்க்கெலா மேதுவாய் நின்றது!
கூடிய தன்றது! ஏ! ஏ! குடிலனை

(சேவகன் வர)

யோடியிங் கழையாய்!

(சேவகன் போக)

உண்மையெப் படியென

நாடுமுன் வாடி நலித லென்பயன்?
210.

நம்புத லெல்லாந் துன்பமே தருவது,
நம்பினோம் நாரா யணனை. அதற்கா
வம்பே செய்தான் மாபா தகனவன்.
நட்பே நமக்கிங் குட்பகை யானது!
முனிவரோ முதுநகர் விடுத்தநாள் முதலா
களவழி யிதுமுனி கட்டற் பாற்றோ

215.

மனத்திடைக் களங்கம் வைத்துளர். அஃதவர்
விளம்பிய மொழியே விளக்கிடும். நன்றாய்
ஆரா யாமுன மனுப்புதல் தவறே. (குடிலன் வர)
வாராய் குடில! மந்திரி யுனக்கு
நேர்தான் ஆரே! நிகழ்ந்தவை யறிவைகொல்?

220.சுந்தர முனிவரோர் சுருங்கைதொட் டுளராம் ;