பக்கம் எண் :

மனோன்மணீயம்
144

நந்தமை யழைத்தன ரொளித்திட வவ்வழி ;
மறுத்திட, மனோன்மணி யேனுமங் கனுப்பென
ஒறுத்தவர் வேண்டினர் உரியநங் குலமுனி
யாதலி னாமென விசைந்தோம் ; அவ்வழி

225.

யாதென வினாயதற் கோதா தேகினர் ;
பாதிரா வருவராம். பகர்ந்தவிக் கற்படை
மெய்யோ பொய்யோ? மெய்யெனி லெவ்வயின்
உளதென வுணர்தியோ? ஒழுங்குகொல், நமது
இளவர சியையங் கனுப்புதல்?


குடில,

இறைய!

230.

முன்னர்நா மொருநா ளிந்நகர் காண
வழைத்தோம்! அந்நாள் யாதோ பூசை
யிழைத்திட வேரரறை யிரந்தனர்


ஜீவ,

ஆம்! ஆம்!


குடில,அவ்வறை யெவ்வறை?

ஜீவ,

அதுயா னறிவேன்


செவ்வே வடக்குத் தேம்பொழிற் கிப்புறம்.
235.

மறுமுறி மணவறை,


குடில,

அறிவிது வெகுநலம்!


(தனதுள்)(ஜீவகனை நோக்கி) 

உறுவதங் கென்னென வுணர்ந்தனை?


ஜீவ,

உணர்ந்திலேன்


குடில,அதுவே கற்படை. அறிந்துளேன் பழுது
செயத்தகு வினையல வாதலில் திருவுளம்
உணர்த்திலேன். முனிவ ரோதிய திதுவே.
240.

இவ்வரண் முற்று மியற்றிய நமக்குச்
செவ்விதி லிதுவோ செய்தற் கரியது?
சுந்தரர் நமையெலாம் புந்தியற் றவரென
நொந்துதா முழைத்ததை நோக்கிடில் நகைப்பே!


ஜீவ,நந்தொழில் பழித்தலே சிந்தையெப் பொழுதும் :
245.பண்டே கண்டுளோம். பாங்கோ வனுப்புதல்?

குடில,

பழுதல : பாலுணுங் குழவிகை யிருப்ப
மல்லுயுத் தஞ்செய வல்லவர் யாரே?