பக்கம் எண் :

மனோன்மணீயம்
145

அனையினை யொருபாற் சேமமா யனுப்பிய
பினையிலை கவையும் பீதியும் பிறவும்.

250.

உட்பகை வெளிப்பகை யெப்பகை யாயினென்?
கவலையொன் றிலதே லெவருனை வெல்வர்?
ஆதலான் முனிவ ரோதிய படியே
யனுப்புத லவசியங் குணப்பிர தம்மே.
ஆனா லறியா அரசகன் னியர்கள்,

255.

தேனார் தெரியல் சூடுமுன் னிரவில்
தனிவழி யநியர்பால் தங்குதல்?


ஜீவ,

தவறே.


குடில,

முனிவரே யாயினும், அநியரே. உலகம்
பைத்தியம் ; பழித்திடும் ; சத்திய முணராது.


ஜீவ,மெய்ம்மை. வதுவைமுன் விதியன் றனுப்புதல்.

குடில,260.

அனுப்பினு மதனா லாம்பய னென்னே?
மனத்துள கவலை மாறுமோ? கவலை
முன்னிலும் பன்னிரு பங்காய் முதிரும்.


ஜீவ,

அதுவே சரி! சரி! ஐயமொன் றில்லை.
வதுவைக் கிதுவோ தருணம்?


குடில,

மன்னவ!

265.

அடியே னறிவிப் பதுவுமிங் கதுவே!
கொடிதே நந்நிலை. குற்றமெப் புறமும்.
அடிக ளறைந்தவா றனுப்பா திருக்கில்
உட்பகைச் சதியா லொருகால் வெற்றி
தப்பிடின் நங்குல மெப்படி யாமோ?

270.

வைப்பிட மெங்குபின்? எய்ப்பிட மெங்கே?
திருமா முனிவரோ கருநா வுடையர்.
நம்பிய தலைவரோ வம்பினர் ; துரோகர்.
இத்தனை பொழுதுமங் கெத்தனை கூச்சல்!
எத்தனை கூட்டம்! எத்தனை குழப்பம்!

275.

முருகனு நாரா யணனும் மொழிந்த
அருவருப் புரையிங் கறையேன். அவர்தாஞ்
சேவகர் குழாங்களைத் திரட்டி யென்மேல்.