பக்கம் எண் :

மனோன்மணீயம்
146

ஏவினர் ; அதற்கவ ரிசைந்திலர். பிழைத்தேன்!
வேண்டினர் பின்னையும் ; தூண்டின ருன்னெதிர்.


ஜீவ,280.காண்டும்! காண்டும்! கடுஞ்சிறை சேர்த்தனை?

குடில,

சேரா திவரைமற் றியாரே விடுவர்?
ஆயினுந் தலைவர் நிலைமை யிஃதே!
வெல்லுவ தெலாநம் வீரமே யல்லால்
இல்லை யவர்துணை யென்பது தெளிவே.

285.

அல்லொடு பகல்போ லல்லல்செய் கவலையும்
வீரமு மெங்ஙனஞ் சேருமோ அறியேன்.
கவலைதீ ருபாயங் கருதில், நுவல்தரு
கல்லறை நன்றே கடிமண முடியில் -
கடிமண மதற்கோ, முடிபுனை மன்னர்

290.

வேண்டுமென் றன்றோ ஆண்டகை நினைத்துளை?
வருடக் கணக்காய் வேண்டுமற் றதற்கே.
ஒருநலங் காணி னொருநலங் காணேம்.
ஏற்ற குணமெலா மிருப்பினு மிதுபோல்
மாற்றல னாய்விடின் மனோன்மணி யென்படும்?

295.

பிரிதலே யரிதாம் பெற்றியீர்! பிரிந்தபின்
பொருதலே யாய்விடிற் பொறுப்பளோ தனியள்!
பூருவ புண்ணிய மன்றோ மன்றல்
நேருமு னிங்ஙன நெறியிலான் துர்க்குணம்
வெளியா யினதும்? எளிதோ விறைவ!

300.

வேந்தராப் பிறந்தோர்க் குனைப்போற் சாந்தமும்
பிறர்துயர் பேணும் பெருமையும் ஒழியா
அறம்நிறை யகமு மறிவு மமைதல்?
பாண்டமேல் மாற்றலாங் கொண்டபின்! என்செய!
ஆண்டுகள் பழகியு மறிகிலஞ் சிலரை.

305.

ஐயோ! இனிநா மந்நிய ராயின்
நன்றா யுசாவியே நடத்துதல் வேண்டும்.
அன்றேற் பெரும் பிழை!


ஜீவ,

ஆ! ஆ! சரியே!


குடில,ஆதலின், இறைவ! ஆய்விடத் தெங்கும்