| | ஏதமே தோன்றுவ தென்னே யிந்நிலை? |
| ஜீவ, | 310. | அரசல வெனினமக் காம்பிழை யென்னை? |
| குடில, | | திருவுளப் பிரியம். தீங்கென் னதனில்? உன்றன் குலத்திற் கூன்றுகோல் போன்று முடிமன் னவர்பல ரடிதொழ நினது தோழமை பூண்டுநல் லூழிய மியற்றும் |
| 315. | வீரமும் மேதையுந் தீரமுந் திறமுங் குலமு நலமுங் குணமுங் கொள்கையும் நிரம்பிய நெஞ்சுடைப் பரம்பரை யாளராய் நிற்பவர் தமக்குமற் றொப்பெவ் வரசர்? அற்பமோ ஐய! நின் னடிச்சே வகமே? |
| ஜீவ, | 320. | என்னோ மனோன்மணிக் கிச்சை? அறிகிலேன்! |
| குடில, | | மன்னோ மற்றது வெளிப்படை யன்றோ? அன்னவட் கிச்சை யுன்னுடன் யாண்டும் இருப்பதே யென்பதற் கென்தடை? அதற்கு விருத்தமாய் நீகொள் கருத்தினைச் சிந்தையிற் |
| 325. | பேணியே கலுழுநள் போலும். பிறர்பால் நாணியிங் கோதாள். வாணியேல் நவில்வள். |
| ஜீவ, | | உத்தமம்! உத்தமம்! மெத்தவு முத்தமம்! பலதே வன்றன் நலமவள் கண்டுளாள்? |
| குடில, | | பலகால் கண்டுளாள். கண்டுளா னிவனும். |
| 330. | ஆர்வமோ டஃதோ மார்பிடைப் பட்டபுண் ‘மனோன்மணி மனோன்மணி’ எனுமந் திரத்தால் ஆற்றுவான் போலவே யவ்வறை யிருந்தவன் சாற்றலுஞ் சற்றுமுன் ஜாடையாய்க் கேட்டேன். ஆயினும். அரச! பேயுல கென்குணம் |
| 335. | அறியா ததனால் வறிதே பலவுஞ் சாற்றும். தன்னயங் கருதல்போற் பிறர்க்குத் தோற்றும். அதனால் தூற்றுவர். அதுவும் மாற்றலே மந்திரத் தலைவர்தம் மாட்சி. ஆதலின், இறைவ! அவைக்களத் தநேக - |
| ஜீவ, | 340. | ஓதலை. ஓதலை. உனதன் றத்தொழில். |
|
|
|