பக்கம் எண் :

மனோன்மணீயம்
148

தனையைக் குரியது தந்தையே யுணருவன்.
இனையதே யென்மகட் கிந்நிலைக் கேற்பதும்.
அரசனா யாய்கினுஞ் சரியிம் முடிபு.
மிகைதெரிந் தவற்றுள் மிக்கது கொளலெனுந்

345.

தகைமையில் தகுவது மிதுவே, அதனால்,
குடிலா! மறுக்கலை.


குடில,

அடியேன். அடியேன்.


ஜீவ,இந்நிசி யிரண்டாஞ் சாம மன்றோ
முன்னநாம் வைத்த முகூர்த்தம்?

குடில,

ஆம்! ஆம்!


ஜீவ,செவ்விது செவ்விது! தெய்வசம் மதமே!
350.

ஆவா! எவ்வள வாறின தென்னுளம்!
ஓவா என்றுயர்க் குறுமருந் திதுவே!
பிரிந்திட லொன்றே பெருந்துயர்.


குடில,

பிரிந்துநீர்

இருந்திட லெல்லா மொருநாள். அதற்குள்
வெல்லுதும், காண்டி! மீட்குதும் உடனே.


ஜீவ,355.

நல்லது! வேறிலை நமக்காம் மார்க்கம்.
ஒருமொழி மனோன்ம ணியுடன்கேட் டிஃதோ
வருகுதும், அதற்குள் வதுவைக்
கமைக்குதி யவ்வறை யமைச்ச ரேறே!

(4)

(ஜீவகன் போக)


குடில,தப்பினன் நாரணன். சாற்றற் கிடமிலை.
(தனிமொழி)360.

இப்படி நேருமென் றெண்ணினர் யாவர்?
முனிவரன் வந்ததும், நனிநல நமக்கே!
மறுப்பளோ மனோன்மணி? சீசீ! மனதுள்
வெறுப்புள ளேனும் விடுத்தவ ளொன்றும்
மொழியாள். சம்மதக் குறியே மௌனம்.

365.

அழுவாள் : அதுவும் பிரிவாற் றாமையே
யாய்விடும், அரச னாய்விலா வுளத்துள்.
நடுநிசி வருமுன் கடிமண மிவண்நாம்
முடிக்கின் முனிபின் தடுப்பது மெவ்விதம்?
ஏய்த்திட வெண்ணின னென்னையும்! பேய்ப்பயல்!