| 370. | வாய்த்ததிங் கெனக்கே மற்றவன் கற்படை. |
| | ஊகஞ் சென்றவா றுரைத்தோம். உறுதி யாகமற் றதனிலை யறிவதார்? உளதல துரைப்பரோ முனிவர்? உளதெனி லுரைத்தவா றிருத்தலே யில்பாம். எதற்கு மீதுதவும். (மௌனம்) |
| 375. | சென்றுகண் டிடுவம். திறவுகோ லிரண்டு செய்த தெதற்கெலா முய்வகை யானதே! எத்தனை திரவிய மெடுத்துளேம்! கொடுத்துளேம்! அத்தனை கொடுத்து மறிவிலாப் படைஞர், நன்றியில் நாய்க ளின்றஃ தொன்றும் |
| 380. | உன்னா தென்னையே யோட்டிடத் துணிந்தன. என்னோ நாரணன் தனக்குமிங் கிவர்க்கும்? எளியனென் றெண்ணினேன். வழிபல தடுத்தான். கெடுபயல் பாக்கியம், கடிமண மிங்ஙனம் நடுவழி வந்ததும்! விடுகிலம். |
| 385. | கொடியினை யினிமேல் விடுகிலம் வறிதே. | (5) |
நான்காம் அங்கம் : 5-ம் களம் முற்றிற்று. --------- |
அரிதா நினைத்ததன் னங்கங்கள் யாவு மழிந்தபின்னும் புரியே பொருளெனப் போற்றிய ஜீவகன் புந்தியென்னே! பிரியாத சார்பு பெயர்ந்து விராகம் பிறந்திடினுந் தெரியாது தன்னிலை யாணவஞ் செய்யுந் திறஞ்சிறிதே! |
நான்காம் அங்கம் முற்றிற்று. ------- |
ஆசிரியப்பா வஞ்சிப்பா கலித்தாழிசை கலித்துறை | 12-க்கு 1-க்கு 3-க்கு 1-க்கு | அடி ,, ,, ,, | 1297 14 12 4 | | | | ------- | ஆக அங்கம் 1-க்குப் பா | 17-க்கு | ,, | 1327 |
|
|
|