| 45. | கொலுவோ கொல்லிது! மணவறை! இருமின். பலதேவ ரேநும் பிதாவிது காறும். வந்தில ரென்னை? |
| | அந்தியிற் கண்டே னடியேன். அதன்பின் ஒருவருங் கண்டிலர். தனிபோ யினராம். |
| ஜீவ, | 50. | இருமிரும் நீரும். எங்கே கினுநங் காரிய மேயவர் கருத்தெப் பொழுதும். |
| (நாராயணனை நோக்கி). | | பாரீ ரவர்படும் பாடு! |
| | சத்தியஞ் சயிக்குமேற் சாற்றிய படியே! |
| ஜீவ, | | இத்தகை யுழைப்போ ரெப்புவ னமுமிலை. |
| 55. | எண்ணிநிச் சயித்த இத்தொழி லினியாம் பண்ணற் கென்தடை? சுவாமி! அடிகள் தந்தநன் முகூர்த்தம் வந்ததோ? |
| | (புருடோத்தமனும், குடிலனும், அருள்வரதன் முதலிய மெய்க்காப்பாளருடன் கற்படை வழி வர.) |
| புருடோத்தமன். | | நின்மின்! நின்மின்! பாதகன் பத்திரம்! |
(கற்படையில் அருள் வரதனை நோக்கி) | | என்பின் னிருவர் வருக. |
| 60. | இந்நிசி யெத்தனை விளக்கு! ஏதோ மன்னவை போலும்! மந்திரா லோசனை! இவர்சுந் தரரே! அவர்நட ராஜர்! இவர்களில் குளரோ! எய்திய தெவ்வழி? இத்திரை யெதற்கோ? அத்திரை யெதற்கோ? |
| 65. | இத்தனை கோலா கலமென் சபைக்கு? மாலையுங் கோலமுங் காணின் மணவறை போலாம். அறிந்தினிப் போவதே நன்மை. மந்திர மாயின் மற்றது மறிவோம். |
|
|
|