| 2-ம் படை. | | வருத்தமே னுனக்கு? மன்னன் திருவுளக் |
| | கருத்தனு சரித்துநாங் காட்டலே கடமை. |
| | (3-ம் படைஞன் மீண்டு வர) |
| 3-ம் படை. | | இப்புறம் வருதி. செப்புவன் ரகசியம். |
| (முதற்படை | | சத்தியஞ் செய்தபின் சாற்றினன். நீயும் |
| | |
| நோக்கி) | 25. | எத்திறத் தோர்க்கு மியம்பலை. பத்தரம்! |
| | அத்திரை மணத்திற் கன்றுமற் றப்புறம் |
| | நெருங்கிய சுரு்கையொன் றுளதாம். அவ்வழி |
| | செல்லில் வெகுதொலை செலுமாம். இப்போர் |
| | வெல்லும் வரையு மவ்வுழி மணந்தோர். |
| | |
| 30. | இருவரு மெய்திவாழ்ந் திருப்பராம். |
| முதற்படை, | | சரி! சரி! |
| | பொருவரும் புத்திமான் குடிலன். எத்தனை |
| | விரைவினிற் சமைத்தான்! வெகுதிற முடையான். |
| 3-ம் படை. | | இப்போ தன்றது ; நகரா ரம்பம் |
| | எப்போ தப்போ தேவருந் துயரங் |
| | |
| | 35. | கருதிமுன் செய்தனன். |
| முதற்படை, | | ஒருவரு மறிந்திலம்! |
| | (முருகன் வர) |
| 3-ம் படை. | | யாரது? முருகனோ? நாரண னெங்கே? |
| முருகன். | | நாரண னப்புறம் போயினன் ; வருவன். |
| 3-ம் படை. | | பிழைத்தீ ரிம்முறை. |
| முருகன். | | பிழைத்தில மென்றும்! |
| 3-ம் படை. | | அத்திரைச் செய்தி யறிவாய். வைத்ததார்? |
| | |
| முருகன். | 40. | வைத்ததா ராயினென்? வெந்தது வீடு! |
| | (இருவரும் நகைக்க) |
| 2-ம் படை. | | வாயினை மூடுமின். வந்தனன் மணமகன். |
| முருகன். | | ஈயோ வாயி லேறிட நாயே! |
| முதற்படை, | | அரசனு முனிவரு மதோவரு கின்றார்! |
| | (ஜீவகன், சுந்தரமுனிவர், கருணாகரர்.நிஷ்டாபரர், பலதேவன், நடராஜன், நாராயணன் முதலியோர் வர) |
ஜீவகன். | | இருமி னிருமின்! நமர்காள் யாரும்! |
| | (ஜீவகன் முனிவர் முதலியோர் தத்தம் இடத்திருக்க) |