பக்கம் எண் :

மனோன்மணீயம்
163

ஐந்தாம் அங்கம்

மூன்றாம் களம்

இடம் : அரண்மனையில் மணமண்டபம். காலம் : நடுநிசி.

அமைச்சர் படைவீரர் முதலியோர் அரசனை யெதிர்பார்த்து நிற்க.

(நிலைமண்டில ஆசிரியப்பா)


முதற்படைத் தலைவன்.

அடிகள்பின் போயினர் யாவர்? அறிவீர்?

2-ம் படை. 

நடரா சனைநீ ரறியீர் போலும்!

முதற்படை. 

அறிவேன். ஆ! ஆ! அரிவையர் யாரே

வெறிகொளார் காணில்! வீணில் வாணியைக்

 

5.கெடுத்தான் கிழவன்.

3-ம் படை.

அடுத்ததம் மணமும்!

தெரியீர் போலும்!

முதற்படை.

தெரியேன். செய்தியென்?

3-ம் படை. 

கோணிலா நாரணன் கொடுஞ்சிறை தவிர்த்தலும்

வாணியின் மனப்படி மன்றல் நடத்தலும்

இவ்வர மிரண்டு மம்மணி வேண்ட

 

10.அளித்தன னனுமதி களிப்புட னரசன்.

முதற்படை. 

இருதிரை யிட்டவா றிப்போ தறிந்தேன்.

ஒருதிரை வாணிக் கொருதிரை மணிக்கே.

3-ம் படை. 

எத்திரை தாய்க்கென் றியம்புதி. கேட்போம்.

முதற்படை. 

இத்திரை தாய்க்காம்.

3-ம் படை. 

சீ! சீ! அத்திரை.

2-ம் படை.  

15.எத்திரை யாயினென்? ஏனிரை கின்றீர்?

முதற்படை. 

இருதிரை வந்தவா றிதுவே யாயினும்

ஒருதிரைக் கொருதிரை யெத்தனை தூரம்?

3-ம் படை. 

அதோஅவ னறிகுவன். அறிந்திதோ வருவேன்.

(3- ம் படைஞன் மற்றோரிடம் போக)

முதற்படை. 

ஐயோ! பொய்யறும் அன்னையம் மணிக்கும்

 

20.பொய்யன் பலதே வனுக்குமோ பொருத்தம்?