| வாணி, | | ஆயிடிற் கேட்குதி யம்மணி! என்சூள். கண்டவர்க் கெல்லாம் பண்டைய வடிவாய் நீயிவ ணிருக்க நின்னுளம் வாரி |
| 150. | வெள்ளிலா மெள்ள விழுங்கி யிங்ஙனம் வேதகஞ் செய்த போதக யூதபம், பேரிலா வூரிலாப் பெரியோ னவன்றான் யாரே யாயினு மாகுக, அவனைநீ யணைநா ளடியேன் மணநாள். அன்றேல், |
| 155. | இணையிலா உன்னடிக் கின்றுபோ லென்றும் பணிசெயப் பெறுவதே பாக்கிய மெனக்கு. கடமையும் பிறவுங் கற்றறி யேன்விடை மடமையே யாயினு மறுக்கலை மணியே! |
| மனோன், | | பேதைமை யன்றோ வோதிய சபதம்? |
| 160. | ஏதிது வாணி! என்மணந் தனக்கோ, இனியரை நாழிகை. இதற்கு ளாவதென்? அன்பின் பெருக்கா லறைந்தனை போலும். மன்பதை யுலகம் வாஞ்சா வசமே. |
| வாணி. | | உடலலா லுயிரும் விழியலா லுணர்வுங் |
| 165. | கடபட சடமலாற் கடவுளு மிலையேல் வேண்டிய விளைக! விசனமென்? அன்றேற் காண்டியவ் வேளை கருணையி னியல்பே. | (1) | | | (இருவரும் போக.) |
ஐந்தாம் அங்கம் : இரண்டாம் களம் | முற்றிற்று. |
|
|
|