| 115. | மனக்களங் கங்களாம் மாசுக ளனைத்துந் தேய்த்தவை மாற்றித் திகழொளி யேற்றி மண்ணிய மணியாப் பண்ணிட என்றே வைத்தவிக் கடிய வாழ்க்கையாஞ் சாணையை பைத்தபூஞ் சேக்கையாப் பாவித் துறங்க |
| 120. | யத்தனஞ் செய்திடு மேழையர் போல, என்னநீ யெண்ணினை! வாணி! இந்தச் சுகவிருப் பேநமைத் தொழும்புசெய் பந்தம். தவமே சுபகரம். தவமென்? உணருவை? உடுப்பவை யுண்பவை விடுத்தர ணடைந்து |
| 125. | செந்தீ யைந்திடைச் செறிந்தமைந் துறைதல் ஆதியா வோதுப வல்ல. அவற்றைத் தீதறு தவமெனச் செப்பிடார் மேலோர். இவ்வுயிர் வாழ்க்கையி லியைந்திடுந் துயரம், ஐயோ! போதா தென்றோ அன்னோர் |
| 130. | போனகந் துறந்து கானகம் புகுந்து தீயிடை நின்று சாவடை கின்றார்? தந்தைதா யாதியா வந்ததன் குடும்ப பந்தபா ரத்தினைப் பேணித் தனது சொந்தமா மிச்சைகள் துறந்து மற்றவர்க் |
| 135. | கெந்தநா ளுஞ்சுக மியைந்திடக் கடமையின் முந்துகின் றவரே முதற்றவ முனிவர். |
| வாணி, | | அத்தகைத் தவமிங் கடியேன் தனக்கும் ஒத்ததே யன்றோ? |
| | மேம்படக் கருதிடி லோம்புதி நீயும். |
| 140. | அடுத்தவர் துயர்கெடுத் தளித்தலே யானிங்கு எடுத்தநற் றவத்தி னிலக்கண மாதலின், நடேசனை நச்சுநின் நன்மண மதுவும் விடாதெனை யடுத்த வீரநா ரணன்றன் கடுஞ்சிறை தவிர்த்தலுங் கடனெனக் கருதி |
| 145. | யெழுதினேன். இஃதோ! வழுதியு மிசைந்தான். என்கட னிதுவரை : இனியுன் னிச்சை. |
|
|
|