பக்கம் எண் :

மனோன்மணீயம்
167

ஜீவ,

அறிந்திடி லிறும்பூ தணையார் யாவர்?
மதியுளார் யாரவன் மதியதி சயித்திடார்?
நெஞ்சுளார் யாரவன் வன்திறற் கஞ்சார்?

105.

யார்வையா ரவனிடத் தாரா ஆர்வம்?
உண்மைக் குறைவிடம் : திண்மைக் கணிகலம்.
சத்திய வித்து : பத்தியுன் மத்தன்.
ஆள்வினை தனக்காள் : கேள்விதன் கேள்வன்.
ஏன்மிக? நமர்காள்! இந்நடு நிசயிலும்

110.

யானறி யாதுழைக் கின்றன னெனக்கா.
நன்றே யிங்கவன் இலாமையும் : அன்றேல்
தற்புகழ் கேட்க அற்பமு மிசையான்.


புரு.(தனதுள்)எத்தனை களங்கமில் சுத்தன்! கட்டம்!

ஜீவ,பற்பல பாக்கியம் படைத்துளர் பண்டுளோர்.
115.

ஒப்பறு மமைச்சனை யிப்படி யொருவரும்
முன்னுளோர் பெற்றிலர் : பின்னுளார் பெறுவதும்
ஐயமென் றுரைப்பேன், அன்னவன் புதல்வன்
மெய்ம்மையும், வாரமும் வீரவா சாரமும்,
பத்திசேர் புத்தியும், யுத்திசே ரூக்கமும்

120.

உடையனா யடையவுந் தற்பிர திமைபோல்,
இனியொரு தலைமுறை நனிசே வகஞ்செய
இங்குவீற் றிருந்தில னாயின். எமர்காள்!
எங்குநீர் கண்டுளீ ரிச்சிறு வயதிற்
பலதே வனைப்போற் பலிதமாஞ் சிறுதரு?


2-ம்படை.125.

இலையிலை யெங்கும்! இவர்போல் யாவர்!


ஜீவ,

எனதர சுரிமையு மெனதர சியல்புந்
தமதா ருயிர்போல் தாம்நினைந் திதுவரை
யெவ்வள வுழைத்துளா ரிவ்விரு வருமெனச்
செவ்விதி னெனைவிட நீவிரே தெரிவீர்.

130.

இக்குல மவர்க்கு மிக்கதோர் கடன்பா
டுடையதென் றொருவரும் அயிர்ப்புறார். அதனால்
தடையற வக்கடன் றவிர்க்கவு நம்முளங்
கலக்கிடு மபாயம் விலக்கவு மொருமணம்
எண்ணினேன். பண்ணுவே னிசைவேல் நுமக்கும்.