| ஜீவ, | | அறிந்திடி லிறும்பூ தணையார் யாவர்? மதியுளார் யாரவன் மதியதி சயித்திடார்? நெஞ்சுளார் யாரவன் வன்திறற் கஞ்சார்? |
| 105. | யார்வையா ரவனிடத் தாரா ஆர்வம்? உண்மைக் குறைவிடம் : திண்மைக் கணிகலம். சத்திய வித்து : பத்தியுன் மத்தன். ஆள்வினை தனக்காள் : கேள்விதன் கேள்வன். ஏன்மிக? நமர்காள்! இந்நடு நிசயிலும் |
| 110. | யானறி யாதுழைக் கின்றன னெனக்கா. நன்றே யிங்கவன் இலாமையும் : அன்றேல் தற்புகழ் கேட்க அற்பமு மிசையான். |
| புரு.(தனதுள்) | | எத்தனை களங்கமில் சுத்தன்! கட்டம்! |
| ஜீவ, | | பற்பல பாக்கியம் படைத்துளர் பண்டுளோர். |
| 115. | ஒப்பறு மமைச்சனை யிப்படி யொருவரும் முன்னுளோர் பெற்றிலர் : பின்னுளார் பெறுவதும் ஐயமென் றுரைப்பேன், அன்னவன் புதல்வன் மெய்ம்மையும், வாரமும் வீரவா சாரமும், பத்திசேர் புத்தியும், யுத்திசே ரூக்கமும் |
| 120. | உடையனா யடையவுந் தற்பிர திமைபோல், இனியொரு தலைமுறை நனிசே வகஞ்செய இங்குவீற் றிருந்தில னாயின். எமர்காள்! எங்குநீர் கண்டுளீ ரிச்சிறு வயதிற் பலதே வனைப்போற் பலிதமாஞ் சிறுதரு? |
| 2-ம்படை. | 125. | இலையிலை யெங்கும்! இவர்போல் யாவர்! |
| ஜீவ, | | எனதர சுரிமையு மெனதர சியல்புந் தமதா ருயிர்போல் தாம்நினைந் திதுவரை யெவ்வள வுழைத்துளா ரிவ்விரு வருமெனச் செவ்விதி னெனைவிட நீவிரே தெரிவீர். |
| 130. | இக்குல மவர்க்கு மிக்கதோர் கடன்பா டுடையதென் றொருவரும் அயிர்ப்புறார். அதனால் தடையற வக்கடன் றவிர்க்கவு நம்முளங் கலக்கிடு மபாயம் விலக்கவு மொருமணம் எண்ணினேன். பண்ணுவே னிசைவேல் நுமக்கும். |
|
|
|