பக்கம் எண் :

மனோன்மணீயம்
168

135.

மணவினை முடிந்த மறுகண மணந்தோர்
இருவரு மிவ்விடம் விடுத்துநம் முனிவரர்
தாபதஞ் சென்று தங்குவர். இத்தகை
ஆபதங் கருதியே யருட்கட லடிகள்
தாமே வருந்திச் சமைத்துளா ரவ்விடம்

140.

போமா றொருசிறு புரையறு சுருங்கை.
அவ்வுழி யிருவரு மடைந்தபின், நம்மைக்
கவ்விய கௌவையுங் கவலையும் விடுதலால்,
வஞ்சிய னொருவனோ, எஞ்சலி லுலகெலாஞ்
சேரினு நம்முன் தீச்செறி பஞ்சே.

145.

இதுவே யென்னுளம். இதுவே நமது
மதிகுலம் பிழைக்கு மார்க்கமென் றடிகளும்
அருளின ராஞ்ஞை. ஆயினு நுமது
தெருளுறு சூழ்ச்சியுந் தெரிந்திட விருப்பே. (1)

(நேரிசை ஆசிரியப்பா)

உரையீர் சகடரே யுமதபிப் பிராயம்.


சகடன்.
நாராயணன்.
(தனதுள்)
150.

அரசர் குலமன்று. ஆயினென்? சரி சரி!
மருகன் தப்பிய வருத்தம் போலும்.


ஜீவ,

குலந்தேர் வதுநற் குணந்தேர் வதுவே.
பெயரா லென்னை? பேயனிவ் வஞ்சியான்
பெயரா லரசன்! செயலாற் புலையன்!


2-ம் படை155.செய! செய! சரிசரி! தெளிந்தோம்! தெளிந்தோம்!

நாரா,

மனிதரா லாவதொன் றில்லை. மன்னவா!
இனியெலா மீசன திச்சை.


சகடன்.

சரி! சரி!


யாவரும்.

சம்மதம்! சம்மதம்! சர்வசம் மதமே!


ஜீவ,

வாராய்! நாரணா! ஆனா லப்புறஞ்

160.

சென்றுநம் மனோன்மணிச் செல்வியை யழைத்து
மன்றல் திரைப்பின் வரச்செய்.

(நாராயணன் போக.)

யார்க்குஞ்

சம்மத மெனிலிச் சடங்கினை முடிப்போம்.
வம்மின்! இனியிது மங்கல மணவறை.