| | கவலை யகற்றுமின் கட்டுடன்! பனிநீர்த் |
| 165. | திவலை சிதறுமின்! சிரிமின்! களிமின்! இன்றுநாம் வென்றோ மென்றே யெண்ணுமின்! இனிநாம் வெல்லற் கென்தடை? தினமணி வருமுன் னேகுவம். அரைநா ழிகைத்தொழில்! ஆற்றுவ மரும்போர் கூற்றுமே யஞ்ச. |
| 170. | நாளைநல் வேளை : நம்மணி பிறந்தநாள். பாரீர்! பதினா றாண்டுமிந் நாளில் ஓரோர் மங்கல விசேடம்! |
| | (நாராயணன் திரும்பிவர. மனோன்மணி வாணி முதலிய தோழியருடன் திரைப்பின்வந்து நிற்க.) |
| நாரா, | | இட்டநின் கட்டளைப் படியே யெய்தினர், |
ஜீவ,(நாரா யணனை நோக்கி) | 175. | மற்றிவர் கவலை மாற்றிட வொருபா சற்றிசைத் திடுவளோ வாணி? சாற்றுதி! |
| வாணி. (பாட) | | (கொச்சகக் கலிப்பா.) |
நீர்நிலையின் முதலையின்வாய் நிலைகுலைந்த வொருகரிமுன் ஓர்முறை யுன்பெயர் விளிக்க வுதவினைவந் தெனவுரைப்பர் ; ஆர்துயர வளக்கர்விழு மறிவிலியா னழைப்பதற்குன் பேர்தெரியே னாயிடினும் பிறகிடல்நின் பெருந்தகையோ. | (1) |
பாராசர் துகிலுரியப் பரிதவிக்கு மொருதெரிவை சீர்துவரை நகர்கருதிச் சிதைவொழிந்தா ளெனவுரைப்பர் ; ஆர்துணையு மறவிருக்கு மறிவிலியா னழைப்பதற்குன் ஊர்தெரியே னாயிடினு முறுதிதர லுனக்குரித்தே. | (2) |
மறலிவர மனம்பதறு மார்க்கண்ட னுனதிலிங்கக் குறிதழுவி யழிவில்வரங் கொண்டான்முன் னெனவுரைப்பர் ; வெறிகழுமிப் பொறியழியும் வெம்பாவி விரவுதற்குன் நெறியறியே னாயிடினு நேர்நிற்றல் நினதருளே. | (3) |
| சுந்தர, | | எதுவோ விதனினு மேற்புடைப் பிரார்த்தனை? மந்திரந் தந்திரம் வழங்கு நற்செபம் |
|
|
|