| | யாவையு மிதுவே. பாவாய்! மனோன்மணி! |
| 180. | வருதி யிப்புறம். வாங்குதி மாலை. |
| | (மனோன்மணி மணமாலைகொண்டு பலதேவனெதிர் வர.) |
| | ஒருதனி முதல்வ னுணர்வ னுன்னுளம். |
| | உன்னன் புண்மையே லின்னமுங் காப்பன். |
| | (புருடோத்தமன் திரைவிட்டு வெளிவந்து நிற்க.) |
| முதற்படை, | | ஆற்றேன்! ஆற்றேன்! ஐய! இத் தோற்றம். |
| 3-ம் படை. | | ஊற்றிருந் தொழுகி யுள்வறந் ததுகண். |
| | |
| 4-ம் படை. | 185. | அமையா நோக்கமு மிமையா நாட்டமும், |
| | ஏங்கிய முகமும் நீங்கிய விதழும், |
| | உயிரிலா நிலையு முணர்விலா நடையும் |
| | பார்த்திடிற் சூத்திரப் பாவையே. பாவம்! |
| | (மனோன்மணி புருடோத்தமனைக் காண ; |
| | உடன் அவன் நிற்குமிடமே விரைவில் நடக்க) |
| யாவரும்.. | | எங்கே போகிறாள்? இதுயார்? இதுயார்? |
| |
| புரு, . | 190. | இங்கோ நீயுளை! என்னுயி ரமிர்தே! |
| (புருடோத்தமன் தலைதாழ்க்க : மனோன்மணி |
| மாலைசூட்டி அவன்றோளோடு தளர்ந்து |
| மூர்ச்சிக்க.) |
| சுந்தர,. | | மங்கலம்! மங்கலம்! மங்கலம்! உமக்கே! |
| யாவரும்.. | | சோரன்! சோரன்! சேரன்! சோரன்! |
| நிஷ்டாபரர்.. | | கண்டேன்! கண்டேன்! கருணா கரரே! |
| (கருணாகரரைத் தழுவி) |
| யாவரும். . | | பற்றுமின்! பற்றுமின்! சுற்றுமின்! எற்றுமின்! |
| |
| பலதே, . | 195. | கொன்மின்! கொன்மின்! |
| (யாவரும் புருடோத்தமனைச் சூழ : சுந்தரர்கூட்டம் விலக்க.) |
| சுந்தர,. | | நின்மின்! நின்மின்! |
| (அருள்வரதனும் மெய்காப்பாளரும் வர) |
| அருள்வரதன்.. | | அடையி னடைவீர் யமபுரம். அகன்மின்! |
| (புருடோத்தமனையும் மனோன்மணியையுஞ் |
| சூழ்ந்து நின்று காக்க.) |
| யாவரும்.. | | படையுடன் பாதகன்! (பின்னிட) |
| அருள், . | | (விலங்குடன் குடிலனைக் காட்டி.) பாதக னீங்குளான். |