பக்கம் எண் :

மனோன்மணீயம்
171

ஜீவ,

குடிலா வுனக்குமிக் கெடுதியேன்? ஐயோ!
அடிகாள்! இதுவென்! இதுவென் அநீதி!

200.

அறியே னிச்சூ தறியேன்! அறியேன்!


சுந்தர,பொறு! பொறு! ஜீவக! அறிகுதும் விரைவில்!

புரு.

வஞ்சியான் வஞ்சியான்! மன்னவ! உன்சொல்
அஞ்சினேன். சூதுன் னமைச்சன் செய்கை.
சுருங்கையின் தன்மை சொல்லியென் னையிங்

205.

கொருங்கே யழைத்தான் உன்னகர் கவர.
உன்னர சுரிமையும் உன்னகர் நாடும்
என்னிட மிரந்தா னிச்சூ திதற்கா!
ஓதிய சுருங்கையி னுண்மைகண் டிவன்தன்
சூதுந் துரோகமுஞ் சொலியுனைத் தெருட்ட

210.

எண்ணியான் வந்துழி யிவ்வொளி விளக்கும்
பண்ணியல் பாட்டும் பழையபுண் ணியமுந்
தூண்டிட ஈண்டுமற் றடையவும், யாண்டும்
எனதுயி ரவாவிய இவ்வரு மருந்தை
நனவினிற் காணவு நண்ணவும் பெற்றேன்.

215.

பிரிகில மினிமேல். உரியநின் னுரிமை
யாதே யாயினு மாகுக. ஈதோ!
மீள்குவன். விடைகொடு. நாளையும்
வேட்பையேற் காண்போம் ஞாட்பிடை நாட்பே.

(2)

ஜீவ,உண்மையோ? குடிலா! உரையாய்! -

(குடிலன் முகங்கவிழ்த்து நிற்க.)


நாரா,

இதுவுநின்

220.உண்மையோ! மௌனமேன்?

யாவரும்.

ஓகோ! பாவி!


நாரா,

படபடத் திடுநின் பாழ்வாய் திறவாய்!


சுந்தர,

விடு விடு! விசாரணைக் கிதுவன் றமையம்!
நன்மையே யாவு நன்மையாய் முடியின்.
வாராய் ஜீவக! பாரா யுன்மகள்

225.

தாராத் தன்னிரு கைதோட் சூட்டி
யெண்படு மார்பிடைக் கண்படு நிலைமை.