மனோன்மணீயம்
23

களத்திற் கழறிய பொருள்கள்

அங்.களம்
I.  1 காவியங்களுக் குரிய மலை நதி அரண் இவற்றின் வருணனை.

  2 மன்மதோபாலம்பனமும் கேசாதிபாத வருணனையும்.

  3 கனாக்கண்டு காமங்கொண்ட மனோன்மணியின் காமசுர வருணனை.

  4 காதல் நிலைமை வாணியின் வாசகத்தால் வருணிக்கப்படுகிறது.

  5 குடிலன் துர்க்குணம் அவனது மொழிகளாலேயே விளக்கப்படுகிறது.

II.

  1 நாட்டுவளம் - திணைமயக்கம் - தூதிலக்கணம் - செங்கோன்மை-  
   அமைச்சு முதலியன.

  2 சூரியோதய வருணனையும் இல்லற இயல்பும்.

  3 பலதேவன் தூதும், புருஷோத்தமன் போருக்கு எழுதலும்.

III.

  1 புருஷோத்தமன் தூதும், அதனைப்பற்றிய ஜீவக குடிலர்         
    சம்பாஷணையும்.

  2 சூரியாஸ்தமனமும், சராசரங்களில் தோற்றும் திருவருள் வைபவமும்.

  3 சந்தியாவருணயையும், மனோன்மணியின் சோக நிலையும்,பக்தியின்
    சுபாவமும், உபயார்த்தமுடைய சிவகாமிசரிதமும்.

  4 சுந்தரமுனிவர் சீடர்கள் போரைப் பற்றியும், மற்றும்           
    உலகியல்களைப்    பற்றியும் சம்பாஷித்தல்.

IV.

   1 நாற்படை வருணனையும், நாட்டபிமான விளக்கமும், வீரரசமும்.

   2 தருமயுத்தத்தின் நீதியும், படைக்குள் குழப்பம் பிறக்க அரசனுக்
     கபாயம் நேர்ந்தவழி நாராயணன் காக்கச் சென்ற கதையும்.

   3 ஜீவகன் சோகமும், குடிலனுடைய தந்திர நடபடியும்,  
     பலதேவனுடைய கீழ்ப்படியாத் துர்க்குணமும்.

   4 குடிலன் நாராயணன்மேல் பொய்க்குற்றம் காட்டி நிலை நிறுத்திய  
     தந்திரமும் ராஜபக்தியின் இயல்பும்.

   5 அரசர் கடமையும் ஆண்மையும், ஜீவகனது ஏழைமையும்,   
     குடிலனுடைய சமயோசித சாமர்த்தியமும்.

V.

  1 புருஷோத்தமனுடைய காம நிலைமையும், குடிலன் அகப்பட்டுக்   
     கொண்ட கதையும்.

  2 மனோன்மணியின் பரிபக்குவ நிலைமையும், உத்தம தபசின் 
     இலக்கணமும்.

  3 மனோன்மணி தெய்வ வருளால் புருடோத்தமனைச் சந்தித்து 
     மாலைசூட்டினமை.