| | நன்று ! நன்று !நின் னாணம். |
| | மன்றலு மானது போலும்வார் குழலே ! | 1 |
| | | |
| வாணி, | 5. | ஏதம் மாநீ சூது நினைத்தனை? |
| | ஒருபொரு ளும்யான் கருதினே னல்லேன். |
| | இச்சகத் தேவரே பாடினும், |
| | உச்சத் தொனியி லுயிர்ப்பெழ லியல்பே. | 2 |
| | | |
| மனோ, | | மறையேல் ! மறையேல் ! பிறைபழி நுதலாய் ! |
| 10. | திங்கள் கண்டு பொங்கிய கடலெனச் |
| | செம்புனல் பாக்கச் செந்தா மரைபோற் |
| | சிவந்தவுன் கபோல நுவன்று நின்மனக் |
| | களவெலாம் வெளியாக் கக்கிய பின்ன |
| | ரேதுநீ யொளிக்குதல்? இயம்பாய் |
| 15. | காதல னேற்றுனக் கோதிய தெனக்கே. | 3 |
| | |
| வாணி, | | ஐயோ கொடுமை ! அம்ம ! அதிசயம் ! |
| | எருதீன் றெனுமுன மெனன்கன் றென்று |
| | திரிபவ ரொப்பநீ செப்பினை ! |
| | நான்கண் டேநாள் நாலைந் தாமே. | 4 |
| | | |
| மனோ, | 20. | ஏதடி ! நுமது காதல் கழிந்ததோ? |
| | காணா தொருபோ திரேமெனுங் கட்டுரை |
| | வீணாயினதோ? பிழைத்தவர் யாவர்? |
| | காதள வோடிய கண்ணாய் ! |
| | ஓதுவாய், என்பா லுரைக்கற் பாற்றே. | 5 |
| | | |
| வாணி, | 25. | எதனையா னியம்புகோ ! என்றலை விதியே. |
| (கண்ணீர் சிந்தி) | | வா : விளை யாடுவோம் வாராய். |
| | யார்முறை யாடுதல்? வார்குழற் றிருவே ! | 6 |
| | | |
| மனோ, | | ஏனிது ! ஏனிது ! வாணி ! எட்பூ |
| | ஏசிய நாசியாய் ! இயம்புக. |
| 30. | மனத்திடை யடக்கலை ! வழங்குதி வகுத்தே. | 7 |
| | | |
| வாணி, | | எப்படி யுனக்கியான் செப்புவே னம்மா? |
| | தலைவிதி தடுக்கற் பாற்றோ? தொலைய |