| மனோன்மணி. | | துணையறும் மகளிர்மேற் சுடுகணை தூர்ப்பவன் |
| (கழல் விளையாடிப் பாட) | | அணைகில னரன்முன்னென் றாடாய் கழல் |
| | அணைந்துநீ றானானென் றாடாய் கழல். | 1 |
| | |
| வாணி, (மேற்படி) | | நீறாயி னாலென்னை நேர்மலர் பட்டபுண் |
| | ஆறா வடுவேயென் றாடாய் கழல் |
| | அழலாடுந் தேவர்க்கென் றாடாய் கழல். | 2 |
| | |
| மனோ, | | இருளிற் றனித்துறை யேழையர் தங்கள்மேற் |
| | பொருதலோ வீரமென் றாடாய் கழல் |
| | போயெரிந் தான்பண்டென் றாடாய் கழல். | 3 |
| | |
| வாணி, | | எரிந்தன னாயிலென் னென்றென்றுந் தம்முடல் |
| | கரிந்தது பாதியென் றாடாய் கழல் |
| | கடுவுண்ட கண்டர்க்கென் றாடாய் கழல். | 4 |
| | |
| மனோ, | | தெருவிற் பலிகொண்டு திரிதரு மம்பலத் |
| | தொருவர்க் குடைந்தானென் றாடாய் கழல் |
| | உருவங் கரந்தானென் றாடாய் கழல். | 5 |
| | |
| வாணி, | | உருவங் கரந்தாலென் னோர்மல ரம்பினால் |
| | அரையுரு வானாரென் றாடாய் கழல் |
| | அந்நட ராஜரென் றாடாய் கழல். | 6 |
| | (பெருமூச்செறிய) |
| | (நேரிசை யாசிரியப்பா) |
| மனோ, (சிரித்து) | | ஏதடி வாணி ! ஓதிய பாட்டி |
| | லொருபெய ரொளித்தணை பெருமூச் செறிந்து? |