பக்கம் எண் :

மனோன்மணீயம்
6

கீண்டெழு மதியென ஈண்டவ தரித்த
135.மனோன்மணி யன்னையை வாழ்த்தார் யாரே?
2-ம் நக,அன்றியு முனிகட் கவள்மேல் வாஞ்சை
இன்றுமற் றன்றே. இமையவர்க் காக
முன்னொரு வேள்வி முயன்றுழி வன்னி
தவசிக டனித்தனி யவிசு சொரிந்துந்
140.தழையா தவிதல் கண்டுளந் தளர்ந்து
மன்னனுங் குடிலனுந் துன்னிய யாவரும்
வெய்துயிர்த் திருக்க, விளையாட் டாக
மைதிகழ் கண்ணி பேதை மனோன்மணி
நெய்பெய் போழ்தி னெடுஞ்சுழி சுழித்து
145.மங்கிய அங்கி வலமாய்ப் பொங்கிப்
புங்கவர் மகிழ்ச்சியைப் பொறித்தது முதலா
முனிவர் யாவரும் மணியென மொழியில்
தங்க டலைமிசைக் கொள்வர், தரணியி
லெங்குள தவட்கொப் பியம்புதற் கென்றே.
4-ம் நக,150.ஒக்கும் ! ஒக்கும் ! இக்குங் கைக்கு
மென்னு மின்மொழிக் கன்னிக் கெங்கே
யொப்புள துரைக்க ! ஓ ! ஓ ! முனிவ
ரவ்வழி யேகுநர் போலும்.
இவ்வழி வம்மின் காண்குது மினிதே.

(நகர்வாசிகள் போக.)


முதல் அங்கம் : முதற்களம்

முற்றிற்று.