| குடிலன், (தனதுள்) | | நங்கா ரியம்ஜயம் எங்கா கினுஞ்செல ! |
| | |
| (சேவகனை நோக்கி) | 110. | சேவக ! முனிவர் சிவிகையுஞ் சின்னமும் |
| | யாவுமவ் வாயிலிற் கொணர்தி. |
| சேவ, | | சுவாமி. |
| | (குடிலன் முதலோர் போக) |
| முதல் நகர்வாசி, | | கடன்மடை விண்டெனக் குடிலன் கழறிய |
| | நயப்புரை ! ஆ ! ஆ ! வியப்பே மிகவும் ! |
| | நாட்டைச் சிறப்பித் துரைத்தது கேட்டியோ? |
| | |
| 2-ம் நக, | 115. | கேட்டோம். கேட்டோம் நாட்டிற் கென்குறை? |
| | விடு ! விடு ! புராணம் விளம்பினன் வீணாய். |
| | |
| 3-ம் நக, | | குடிலன் செய்யும் படிறுகள் முனிவ |
| | ரறியா தவரோ? சிறிதா யினுமவ |
| | னுரைத்தது கருத்திடைக் கொண்டில ருவர்த்தே. |
| | |
| 1-ம் நக, | 120. | ஆம் ! ஆம் ! அவன்முக மேமா றினதே. |
| | விரசமா யரசனும் வியர்த்தனன். கண்டேன். |
| | |
| 2-ம் நக, | | முனிவரங் கோதிய தென்னை? முற்றுந் |
| | துனிபடு நெருக்கிற் கேட்டிலன். |
| 3-ம் நக, | | யாதோ - |
| | மனோன்மணி யெனப்பெயர் வழங்கினர், அறிவை |
| | |
| 4-ம் நக, | 125. | வாழ்த்தினர் போலும், மற்றென்? | [கொல்? |
| 2-ம் நக, | | பாழ்த்த இத் |
| | தந்தையிற் பரிவுளர் மனோன்மணி தன்மேல். |
| | |
| 3-ம் நக, | | ஐயமற் றதற்கென்? யார்பரி வுறார்கள்? |
| | வையகத் தவள்போன் மங்கைய ருளரோ? |
| | அன்பே யுயிரா வழகே யாக்கையா |
| | |
| 130. | மன்பே ருலகுசெய் மாதவ மதனான் |
| | மலைமகள் கருணையுங் கலைமக ளுணர்வுங் |
| | கமலையி னெழிலு மமையவோ குருவாய்ப் |
| | பாண்டியன் றொல்குல மாகிய பாற்கடல் |