பக்கம் எண் :

மனோன்மணீயம்
4

நாட்டிய பதாகையிற் றீட்டிய மீனம்,
80.உவாமதிக் குறுமா சவாவொடு நக்கும்.
வெயில்வரி யெயிலினங் காக்க வியற்றிய
எந்திரப் படைகளுந் தந்திரக் கருவியும்
பொறிகளும் வெறிகொளுங் கிறிகளு

[மெண்ணில. -

சுந்தர, (எழுந்து) சம்போ ! சங்கா ! அம்பிகா பதேஎ !
85.நன்று மன்னவ ! உன்றன் றொல்குலங்
காக்கநீ யாக்கிய இவையெலாங் கண்டுளேம்.
அல்லா துறதி யுளதோ? சொல்லுதி !
ஜீவ,என்னை ! என்னை ! எமக்கருள் குரவ !
இன்னும் வேண்டிய தியாதோ? துன்னலர்
90.வெருவுவர் கேட்கினும்; பொருதிவை வென்றுகைக்
கொள்ளுவ ரென்பதும் உள்ளற் பாற்றோ?
ஆயினு மரணி லுளபுரை நோக்கி
நீயினி யியம்பிடி னீக்குவ னொடியே.
சுந்தர, கால மென்பது கறங்குபோற் சுழன்று
95.மேலது கீழாக் கீழது மேலா
மாற்றிடுந் தோற்ற மென்பது மறந்தனை.
வினைதெரிந் தாற்றும் வேந்தன் முனமுனம்,
ஆயற் பாற்ற தழிவு மஃதொழி
வாயிலு மாமென வையகம் புகலும்.
100.உன்னையு முன்குலத் துதித்தநம் மனோன்மணி
தன்னையுஞ் சங்கரன் காக்க ! தயாநிதே !
அன்பும் அறமுமே யாக்கையாக் கொண்ட
நின்புதல் வியையான் காணநே சித்தேன்,
அத்திரு வுறையும் அப்புறம் போதற்
105.கொத்ததா மோஇக் காலம்? உணர்த்தாய்.
ஜீவ. ஆம் ! ஆம் ! சேவக ! அறைதி சென்று
தேமொழிக் கன்னிதன் சேடியர் தமக்கு
நங்குல முனிவர் இங்குள ரெனவே.

(அரசனும், முனிவரும், சீடரும் அப்புறம் போக)