| 45. | உன்னடி பரவி யுரைப்பது கேண்மோ. |
| | தென்பாண்டி நாடே சிவலோக மாமென |
| | முனவாத வூரர் மொழிந்தனர். அன்றியுந் |
| | தரணியே பசுவெனச் சாற்றலு மற்றதிற் |
| | பரதமே மடியெனப் பகர்வதுஞ் சரதமேல், |
| | |
| 50. | பால்சொரி சுரைதென் பாண்டி யென்பது |
| | மேல்விளம் பாதே விளங்கும். ஒருகா |
| | லெல்லா மாகிய கண்ணுத லிறைவனும் |
| | பல்லா யிரத்த தேவரும் பிறரும் |
| | நிலைபெற நின்ற பனிவரை துலையின் |
| | |
| | 55. | ஒருதலை யாக, உருவஞ் சிறிய |
| | குறுமுனி தனியா யுறுமலை மற்றோர் |
| | தலையாச் சமமாய் நின்றதேல், மலைகளில் |
| | மலையமோ அலதுபொன் வரையே பெரிது? |
| | சந்நு செவிவழித் தந்த கங்கையும், |
| | |
| 60. | பின்னொரு வாயசங் கவிழ்த்த பொன்னியும், |
| | வருந்திய தேவரோ டருந்தவ்ா வேண்ட, |
| | அமிழ்திலுஞ் சிறந்த தமிழ்மொழி பிறந்த |
| | மலையம்நின் றிழிந்து, விலையுயர் முத்தும் |
| | வேழவெண் மருப்பும் வீசிக் காழகிற் |
| | |
| 6. | .சந்தனா டவியுஞ் சாடி வந்துயர் |
| | குங்கும முறித்துச் சங்கின மலறுந் |
| | தடம்பணை தவழ்ந்து, மடமயி னடம்பயில் |
| | வளம் பொழில் கடந்து குளம்பல நிரப்பி, |
| | யிருகரை வாரமுந் திருமக ளுறையுளாப் |
| | |
| 70. | பண்ணுமிப் புண்ணிய தாமிர வர்ணியும், |
| | எண்ணிடி லேயுமென் றிசைக்கவும் படுமோ? |
| | இந்நதி வலம்வர விருந்தநந் தொன்னகர் |
| | பொன்னகர் தன்னிலும் பொலிவுறல் கண்டனை. |
| | தொடுகட லோவெனத் துணுக்குறும் அடையலர் |
| | |
| 75. | கலக்கத் தெல்லையுங் கட்செவிச் சுடிகையும் |
| | புலப்பட வகன்றாழ் புதுவக ழுடுத்த |
| | மஞ்சுகண் துஞ்சுகம் இஞ்சி யுரிஞ்சி |
| | உதயனு முடல்சிவந் தனனே ! அதன்புறம் |