பக்கம் எண் :

மனோன்மணீயம்
2

ஒருசா ரொதுங்குமின். ஒருபுறம் ! ஒருபுறம் !
               (ஜீவகன் வர)
யாவரும். (தொழுது) ஜய ! ஜய ! விஜயீ பவரா ஜேந்திரா !!

(சுந்தரமுனிவர், கருணாகரர், குடிலன்,
நகரவாசிகள் முதலியோர் வர)

ஜய ! ஜய ! விஜய ! தவரா ஜேந்திரா !!
ஜீவகன்.  20.வருக ! வருக ! குருகிரு பாநிதே !
திருவடி தீண்டப் பெற்றவிச் சிறுகுடி
லருமறைச் சிகரமோ ஆலநன் னீழலோ
குருகுல விஜயன் கொடித்தேர்ப் பீடமோ
யாதென வோதுவன்? தீதற வாதனத்து
25.இருந்தரு ளிறைவ ! என்பவ பாச
மிரிந்திட நின்பத மிறைஞ்சுவ லடியேன்.
               (ஜீவகன் பாதபூசை செய்ய)
சுந்தரமுனிவர். வாழ்க ! வாழ்க ! மன்னவ ! வருதுயர்
சூழ்பிணி யாவுந் தொலைந்து வாழ்க !
சுகமே போலும், மனோன்மணி?
ஜீவ.                சுகம். சுகம்.
சுந்தர, 30.இந்நக ருளாரும் யாவரும் க்ஷேமம்?
ஜீவ. உன்னரு ளுடையேர்ாக் கென்குறை? க்ஷேமம்.
கூடன் மாநகர் குடிவிட் டிப்பாற்
பீடுயர் நெல்லையில் வந்தபின் பேணி
அமைத்தன னிவ்வரண். இமைப்பறு தேவருங்
35..கடக்கரு மிதன்றிறங் கடைக்கண் சாத்தி
ஆசிநீ யருள நேசித்தேன் நனி.
எத்தனை புரிதா னிருக்கினு மெமக்கெலாம்,
அத்த ! நின் னருள்போ லாணெது? குடில !
இவ்வழி யெழுந்தநம் மிறைவர், கடிபுரி
40.செவ்விதி னோக்கக் காட்டுக தெரிந்தே.
குடிலன், ஊன்வரு பெருநோய் தான்விட வடைந்த
அன்பரின் புறவிவ் வருளாருத் தாங்கி
வந்தருள் கிருபா சுந்தர மூர்த்தீ !
நீயறி யாததொன் றில்லை : ஆயினும்,