மனோன்மணீயம் முதல் அங்கம் முதற் களம் இடம் : பாண்டியன் கொலுமண்டபம், காலம் : காலை. | சேவகர்கள் கொலுமண்டபம் அலங்கரித்து நிற்க. | [நேரிசை ஆசிரியப்பா] |
| முதற்சேவகன், | | புகழ்மிக அமைதரு பொற்சிங் காதனந் திகழ்தர இவ்விடஞ் சேர்மின். சீரிதே. | | 2-ம் சேவ, | | அடியிணை யருச்சனைக் காகுங் கடிமல | | | ரெவ்விடம் வைத்தனை? | | 3-ம் சேவ, | | ஈதோ ! நோக்குதி. | | 4-ம் சேவ, | 5. | அவ்விடத் திருப்பதென்? | | 3-ம் சேவ, | | ஆம். பொறு ! பொறு ! | | | விழவறா வீதியில் மழையொலி யென்னக் | | | கழைகறி களிறுகள் பிளிறுபே ரொலியும், | | | கொய்யுளைப் புரவியின் குரத்தெழு மோதையும் | | | மொய்திரண் முரசின் முழக்கு மவித்துச் | | 10. | ‘சுந்தர முனிவா ! வந்தனம் வந்தனம்’ | | | எனுமொலி யேசிறந் தெழுந்தது. கேண்மின் ! | | 2-ம் சேவ, | | முனிவர ரென்றிடிற் கனிவுறுங் கல்லும் ! | | 4-ம் சேவ, | | எத்தனை பத்தி ! எத்தனை கூட்டம் ! எள்விழற் கிடமிலை. யான்போய்க் கண்டேன் ! | | 3-ம் சேவ, | 15. | உனக்கென் கவலை? நினைக்குமுன் னேடலாம். | | முதற்சேவ, | | அரசனும் ஈதோ அணைந்தனன். காணீர் ! |
|
|
|