பக்கம் எண் :

மனோன்மணீயம்
16

45.குற்றங் காணக் குறுகுதல் முற்றும்.
மணற்சோற் றிற்கற் றேடுதல் மானும்.

(சகடர் வர)

ஜீவ. (சகடரைசுகமோ யாவரும்? முதிய சகடரே !
நோக்கி)மகிழ்வுற வும்மை நோக்கி வெகுநாள்
ஆயின தன்றே?
சகடர்,

ஆம் ! ஆம் ! அடியேன்.

ஜீவ.50.மேயின விசேடமென்? விளம்புதிர். என்குறை?
சகட,அறத்தா றகலா தகலிடங் காத்துப்
பொறுத்ததோட் புரவல ! உன்குடை நீழற்
பொருந்து மெங்கட் கரந்தையு முளதோ?
சுகமிது காறும். அகமகிழ் வுற்றுன்
55.மந்திரத் தலைவன் குடிலன் மகற்கே
எந்தன் புதல்வி வாணியை வதுவையிற்
கொடுக்கவோ ராசை கொற்றவ ! மற்றது
முடிக்கநின் கருணையே முற்றும்வேண் டுவனே.
ஜீவ.சீலஞ் சிந்தை கோல மனைத்துஞ்
60.சாலவும் பொருந்தும், சகடரே ! அதனால்
களித்தோம் மெத்த, ஏ ! ஏ ! குடில !
ஒளித்த தென்நீ யுரையா தெமக்கே?
குடில,ஆவதாயி னறிவியா தொழிவனோ?
ஜீவ.இடையூ றென்கொல்? இடியே றன்ன
65.படையடு பலதே வன்றா னேதோ
விரும்பினன் போலும் வேறோர் கரும்பே !
குடில,இல்லையெம் மிறைவ ! எங்ஙன முரைக்கேன் !
சொல்லிற் பழிப்பாம். சகடரே சொல்லுக.
ஜீவ.என்னை? சகடரே ! இடையூ றென்னை?