| சகட, | 70. | பரம்பரை யாயுன் றொழும்புபூண் டொழுகும் |
| | அடியேன் சொல்பழு தாயின தில்லை. |
| | முடிவிலாப் பரிவுடன் வளர்த்தவென் மொய்குழல் |
| | ஒருத்தியே யென்சொல் வியர்த்தமாக்குவள். |
| | ஒருதலை யாயிம் மணத்திற் குடன்படாள். |
| 75. | விரிதலைப் பேய்போல், வேண்டிய விளம்பியும், |
| | ஓரா ளொன்றும் : உணராள் தன்னயம் : |
| | நேரா ளொருவழி : பாராள் நெறிமுறை : |
| | என்னயான் செய்கேன்? இதன்மே லெனக்கும் |
| | இன்னல் தருவதொன் றில்லை. தாதையர் |
| 80. | மாற்றங் கேளா மக்கள் கூற்றுவர் |
| | எனுமொழி யெனக்கே யனுபவ மிறைவ ! |
| | உரைத்தவென் கட்டுரை பிழைத்திடப் பின்னுயிர் |
| | தரித்திருந் தென்பயன்? சாவோ சமீபம். |
| | நரைத்த தென்சிரம் : திரைத்த தென்னுடல் : |
| 85. | தள்ளருங் காலம் : பிள்ளையும் வேறிலை. |
| | என்னுரை காத்துநீ யிம்மண முடிக்க |
| | மன்னவ ! கிருபையேல் வாழ்து மிவ்வயின், |
| | இல்லையேல் முதியவென் னில்லா ளுடனினி |
| | (கண்ணீ்ா துளிக்க) |
| | செல்ல விடையளி ! செல்லுதுங் காசி. |
| | |
| ஜீவ. | 90. | எனிது சகடரே ! என்கா ரியமிது ! |
| | தேன்மொழி வாணி செவ்விய குணத்தாள். |
| | காணி லுரைப்பாம். வீணிவ் வழுகை. |
| | |
| நாரா, (தனதுள்) | | பாதகன் கிழவன் பணத்திற் காக |
| | ஏதுஞ் செய்வன். இறைவனோ அறியான். |
| 95. | ஓதுவங் குறிப்பாய். உணரி லுணர்க. |
| | |
| | நேரிசை வெண்பா |