பக்கம் எண் :

மனோன்மணீயம்
18

தன்மகவை விற்றவரிச் சந்திரனு முன்னவையில்

என்மகிமை யுள்ளா னினி.

(நிலைமண்டில ஆசிரியப்பா தொடர்ச்சி)


ஜீவ.தனிமொழி யென்னை?
நாரா,

சற்றும் பிசகிலை.

நீட்டல் விகாரமாய் நினையினு மமையும்.
ஜீவ.காட்டுவ தெல்லாம் விகாரமே, காணாய்
கிழவரி னழுகை.
நாரா,

சிலவரு டந்தான்.

100.நெடுநாள் நிற்குமிளையவ ரழுகை.
ஜீவ.விடு,விடு. நின்மொழி யெல்லாம் விகடம்.

(நாராயணன் போக.)

(சகடரை நோக்கி)அறிவிர்கொல் லவளுளம்?
சகட,

சிறிதியா னறிவன்.

திருநட ராஜனென் றொருவனிங் குள்ளான்.
பொருவரும் புருடன்மற் றவனே யென்றவள்
105.சொல்வது கேட்டுளர் சிற்சில தோழியர்.
குடில, (அரசனைநல்ல தப்படியே நடக்கிலென்? இவர்க்கும்
நோக்கி)பொல்லா முரண்டேன்?
சகட, (குடிலனை

போம் ! போம் ! உமது

நோக்கி)குழந்தையே லிங்ஙனங் கூறீர் ! முற்றும்,
இழந்திட வோவெனக் கித்தனை பாடு?
110.பூவையை வளர்த்துப் பூனைக் கீயவோ?
(அரசனை நோக்கி)காவலா ! அவனைப் போலயான் கண்டிலன்
சுத்தமே பித்தன். சொல்லுக் கடங்கான்.
தனியே யுரைப்பன். தனியே சிரிப்பன்.
எங்கெனு மொருபூ இலைகனி யகப்படில்
115.அங்கங் கதனையே நோக்கி நோக்கித்
தங்கா மகிழ்ச்சியிற் றலைதடு மாறுவன்.