பக்கம் எண் :

மனோன்மணீயம்
19

பாற்கலு மவனுக் ககப்படாத் திரவியம்
ஆயிரந் தடவை யாயினு நோக்குவன்.
பேயனுக் களிக்கவோ பெற்றனம் பெண்ணை?
ஜீவ. 120.ஆமாம் ! யாமுங் கண்டுளேஞ் சிலகால்
நின்றா னின்ற படியே, அன்றி
யிருக்கினு மிருப்ப னெண்ணிலாக் காலம்.
சிரிக்கினும் விழிக்கினு நலமிலை தீயதே.
அவனன் றோமுன் னஞ்சைக் களத்தில் -
குடில, 125.அவன்றான் ! அவன்றான் ! அழகன் ! ஆனந்தன்.
ஜீவ. அழகிருந் தென்பயன்? தொழிலெலா மழிவே.
எங்கவ னிப்போது?
குடில,

இங்குள னென்றனர்.

சிதம்பரத் தனுப்பினேன் : சென்றிலன், நின்றான்.
இதந்தரு நின்கட்ட ளையெப் படியோ?
ஜீவ. 130.மெத்தவும் நன்மை. அப்படி யேசெய்.
குடில, சித்தம். ஆயினுஞ் செல்கிலன். முனிவர்
பிரியனா தலினாற் பெயர்ந்திலன் போலும்.
ஜீவ. சரியல. இராச்சிய தந்திரத் தவர்க்கென்?
(சகடரை நோக்கி) நல்லது சகடரே ! சொல்லிய படியே
135.மொழிகுவம் வாணிபால். மொய்குழற் சிறுமி
யழகினில் மயங்கினள். அதற்கென்? நும்மனப்
படியிது நடத்துவம். விடுமினித் துயரம்.
சகட, இவ்வுரை யொன்றுமே யென்னுயிர்க் குறுதி.
திவ்விய திருவடி வாழுக சிறந்தே !

(சகடர் போக, செவிலி வர.)

ஜீவ. (செவிலியின் 140.என்னை யிவண்முக மிப்படி யிருப்பது?
முக நோக்கி) தோற்றம் நன் றன்றே !
செவிலி,

நேற்றிரா முதலா -