| ஜீவ. | | பிணியோ வென்கண் மணிக்கு? |
| | |
| செவிலி,. | | பிணியா |
| | யாதுமொன் றில்லை. ஏதோ சிறுசுரம். |
| | |
| ஜீவ. | | சுரம் ! சுரம் ! ஓ ! சொல்லுதி யாவும் |
| 145. | அரந்தையொன் றறியாள் ! ஐயோ ! விளைந்தவை |
| | உரையாய் விரைவில். ஒளிக்கலை யொன்றும் ! |
| | வந்தவா றென்னை? நடந்தவா றென்னை? |
| | |
| செவிலி, | | அறியேம் யாங்கள், ஐய ! அம் மாயம் |
| | நறவுமிழ் நளினம் பொலிவிழந் திருப்ப |
| 150. | நம்மனை புகுந்த செல்வி, எம்முடன் |
| | மாலையி லீலைச் சோலை யுலாவி |
| | அமுதமூற் றிருக்குங் குமுதவாய் விண்டு |
| | நயவரை பலவுங் குயிலின் மிழற்றி |
| | மலைய மாருதம் வந்துவந் துந்த |
| 155. | நிலவொளி நீந்திநந் நெடுமுற் றத்துப் |
| | பந்துவந் தாடிமேன் மந்திர மடைந்தே |
| | துணைபுண ரன்னத் தூவி யணைமிசைக் |
| | கண்படு மெல்லை - கனவோ நினைவோ - |
| | ‘நண்ப ! வென்னுயிர் நாத’ வென் றேங்கிப் |
| 160. | புண்படு மவள்போற் புலம்புறல் கேட்டுத் |
| | துண்ணென யாந்துயி லகற்றப் புக்குழி, |
| | குழலுஞ் சரியும், கழலும் வளையும் ; |
| | மாலையுங் கரியும், நாலியும் பொரியும் ; |
| | விழியும் பிறழும், மொழியும் குழறும் ; |
| 165. | கட்டழ லெரியும், நெட்டுயிர்ப் பெறியும் ; |
| | நயனநீர் மல்கும், சயனமே லொல்கும் ; |
| | இவ்வழி யவ்வயிற் கண்டுகை நெரியா, |
| | தெய்வம் நொந்தேம், செய்கட னேர்ந்தேம் ; |
| | அயினிநீர் சுழற்றி யணிந்தேம் பூதி ; |
| 170. | மயிலினை மற்றோ ரமளியிற் சேர்த்துப் |
| | பனிநீர் சொரிந்து நனிநேர் சாந்தம் |
| | பூசினோம் ; சாமரை வீசினேம் ; அவையெலாம், |