பக்கம் எண் :

மனோன்மணீயம்
21

எரிமே லிட்ட இழுதா யவட்கு
வரவர மம்மர் வளர்க்கக் கண்டு
175.நொந்தியா மிருக்க, வந்தன வாயசம்
கா கா இவளைக் கா’வெனக் கரைந்து ;
சேவலுந் திகைத்துத் திசைதிசை கூவின ;
கங்குல் விடிந்தும் அங்கவள் துயரம்
சற்றுஞ் சாந்த முற்றில ததனால்
180.அரச ! நீ யறியிலெஞ் சிரசிரா வென்றே
வெருவி யாங்கள் விளைவ துரைக்கும்
நிமித்திகர்க் கூஉய்க் கேட்டோம் நிமித்தம்
பெண்ணை யந்தார் சூடிட நுந்தம்
பெண்ணை யந்தார் சூட்டெனப் பேசினர் ;
185.எண்ணம் மற்றவர்க் கியாதோ வறியேம் ;
பனம்பூச் சூடியு முனம்போ லவேசுரம்.
ஏது மறியாப் பேதை ! நேற்றுத்
தவஞ்செய வாசை யென்றவள் தனக்குக்
காதனேய் காணவோ ரேதுவு மில்லை.
190.எம்தா யிருக்கு நிலைமை யினிநீ
வந்தே காண்குதி மன்னவ ரேறே !
ஜீவ. ஆ ! ஆ ! நோவிது காறுமொன் றறிகிலள்.
இதுவென் புதுமை? என்செய் கோயான்?
குடில, தவஞ்செய வாசை யென்றுதாய் நவின்ற
195.வாக்கு நோக்கின் முனிவர் மந்திரச்
செய்கையோ வென்றோ ரையம் ஜனிக்கும் ;
நேற்றங் கவட்கவர் சாற்றிய மாற்றம்
அறியலாந் தகைத்தோ?
ஜீவ.

வறிதவ் ஐயம்.

மொழியொரு சிறிது மொழிந்திலர். கண்டுழி
200.அழுதனர். அழுதா ளுடனம் மமுதும்.
ஆசி பேசியங் ககலுங் காலை
ஏதோ யந்திர மெழுதிவைத் திடவோர்
அறையுட னங்கணந் திறவுகோ லோடு