| | தமக்கென வேண்டினர். அளித்தன முடனே. |
| 205. | நமக்கதி னாலென்? நாமறி யாததோ? |
| | என்னோ அறியேன் இந்நோய் விளைவு? |
| | (ஜீவகனும் செவிலியும் போக.) |
| | |
| குடில, (தனதுள்) | | யந்திரத் தாபன மோவவ ரெண்ணினர்? |
| | அவ்வள வறிவி லாரோ முனிவர்? |
| | அவ்வள வேதான். அன்றியென்? ஆயினும், |
| 210. | எத்தனை பித்தனிவ் வரசன் ! பேதையின் |
| | இத்திறங் காம மென்பதிங் கறியான். |
| | உரைக்குமுன் கருதுவம் நமக்குறு நலமே, |
| | (குடிலன் போக.) |