| ஜீவகன். | | உன்னன் பிதுவோ? என்னுயி ரமிர்தே ! |
| | உனக்குறு துயர மெனக்குரை யாததென்? |
| | விரும்பிய தென்னென் றுரைக்கில் விசும்பில் |
| | அரும்பிய அம்புலி யாயினுங் கொணர்வன். |
| 5. | வருத்துவ தென்னென வழங்கின் மாய்ப்பன் |
| | உறுத்துங் கூற்றுவ னாயினு மொறுத்தே. |
| | தாய்க்கு மொளித்த சூலோ? தையால் ! |
| | வாய்க்கு மொளித்த வுணவோ? மங்காய் ! |
| | ஏதாயினு மெனக் கோதா துளதோ? |
| 10. | பளிங்கும் பழித்த நெஞ்சாய் ! உனக்கும் |
| | களங்கம் வந்த காரண மெதுவோ? |
| | பஞ்ச வனக்கிளி செஞ்சொல் மிழற்றி |
| | இசையது விரித்தோர் பிசித மரமேல் |
| | இருந்து பாடு மெல்லை, ஓர் வானவன், |
| 15. | திருந்திய இன்னிசை யமுதிற் செப்பிப் |
| | போயது கண்டு, சேயதோர் போந்தையில் |
| | தனியே பறந்து போய்த் தங்கி, அங்கவன் |
| | பாடிய இசையே கூவிட வுன்னி |
| | நாடி நாடிப் படியும் வராது, |
| 20. | வாடி வாயது முடி, மௌனமாய் |
| | வருந்தி யிருந்ததாய்க் கண்ட கனாவும் |
| | நேற்றன் றோஎனக் கியம்பினை ! நெஞ்சில் |
| | தோற்றிய தெல்லா மிங்ஙனஞ் சொல்லும் |
| | பேதாய் ! இன்றெனக் கென்னோ |
| 25. | ஓதா யுன்ற னுளமுறு துயரே? | 1 |