பக்கம் எண் :

மனோன்மணீயம்
24

செவிலி, உன்பிதா உலகாள் வேந்த னன்பாய்ச்
சொல்லா யென்னில் துப்பிதழ் துடித்துச்
சொல்ல வுன்னியுஞ் சொல்லா தடக்கில்
யாம்படு துயர மறிந்துங்,
30.காம்படு தோளீ ! கருதாய் போன்மே. 2
ஜீவ. ஐயோ ! இதற்கென் செய்வேன் ! ஆ ! ஆ !
பொய்யோ பண்ணிய புண்ணிய மனைத்தும்?
பிள்ளை யில்லாச் செல்வங் கள்ளியிற்
சோறே போலப் பேரே யன்றி
35.வேறே யென்பயன் விளைக்கு மென்றுனி
நெடுநாள் நைந்து நொந்து, கெடுவேன் !
பட்டபா டெல்லாங் கெட்டுப் பரிதி
வந்துழி யகலும் பனியெனச் சுந்தர
முனிவன் முயன்ற வேள்வியாற் பிள்ளைக்
40.கனியென வுனையான் கண்டநாள் தொட்டு,
நின்முக நோக்கியும் நின்சொற் கேட்டும்
என்மிகை நீக்கி யின்ப மெய்தி,
உன்மன மகிழ்ச்சிக் குதவுவ வுஞற்ற
உயிர்தரித் திருந்தேன். செயிர்தீ ரறமும்
45.வாய்மையும் மாறா நேசமுந் தூய்மையும்
தங்கிய வுன்னுள மென்னுளந் தன்னுடன்
எங்குங் கலந்த வியல்பா லன்றோ
மறந்தே னுன்றா யிறந்த பிரிவும்?
உன்னை யன்றி யென்னுயிர்க் குலகில்,
50.எதுவோ வுறுதி யியம்பாய் !
மதிகுலம் விளங்க வருமனோன் மணியே ! 3
மனோன்மணி. எந்தையே ! எனதன் பினுக்கோ ரிழுக்கு
(கண்ணீர் துளும்பி) வந்த தன்று. மேல் வருவது மிலை.இலை.
உரைக்கற் பாற்றதொன் றில்லை.
55.உரைப்பதெப் படியா னுணரா தொழியிலே? 4
ஜீவ. குழந்தாய் ! என்குலக் கொழுந்தே ! அழாய்நீ.
அழுவையே லாற்றேன். நீயழ லிதுவரைக்