பக்கம் எண் :

மனோன்மணீயம்
25

கண்டது மிலை.யான் கேட்டது மிலையே.
பெண்களின் பேதைமை யென்னே ! தங்களைப்
60.பெற்றா ருற்றார் களுக்குந் தமக்கும்,
விழுமம் விளைத்துத் தாமே யழுவர்.
(வாணியை நோக்கி) என்னே யவர்தம் ஏழைமை ! மின்னேய்
மருங்குல் வாணீ ! வாரா யிப்புறம்.
அருங்கலை யாய்ந்தநின் றந்தைசொன் மதியும்,
65.உன்புத் தியுமுகுத் துழல்வதென் வம்பில்?
நலமே சிறந்த குலமே பிறந்த
பலதேவ னாமொரு பாக்கிய சிலாக்கியன்
தன்னைநீ விடுத்துப் பின்னையோர் பித்தனை
நச்சிய தென்னை? சீச்சீ !
70.நகையே யாகும் நீசெயும் வகையே. 5
வாணி. அகலிடந் தனிபுரந் தாளும் வேந்தே
நிகழுமென் சிறிய நினைவெலாம் விரித்து
விநயமாய் நின்பால் விளம்ப வெனது
நாணம் நாவெழா தடக்கு மாயினும்
75.பேணி யொருமொழி பேசுவன்.
நேசமில் வதுவை நாசகா ரணமே. 6
ஜீவ. புதுமை நீ புகன்றாய் ! வதுவைமங்கையர்க்குப்
பெற்றா ராற்றுவர். ஆற்றிய வழியே
தையலார் மையலாய் நேயம் பூண்டு
80.வாழ்வது கடமை. அதனில்
தாழ்வது தகுதியோ தருமமோ? சாற்றே. 7
வாணி. கற்பனைக் கெதிரா யற்பமும் மொழியேன்.
ஆயினும் ஐயமொன் றுண்டு. நேயமும்
ஆக்கப் படும்பொரு ளாமோ? நோக்கில்
85.துன்பே நிறையும் மன்பே ருலகாம்
எரியுங் கானல் விரியும் பாலையிற்
திரியும் மனிதர் நெஞ்சஞ் சிறிது
தங்கி யங்கவ ரங்கங் குளிரத்
தாருவாய்த் தழைத்தும், ஓயாத் தொழிலில்