| 90. | நேருந் தாக நீக்குவான் நிமல |
| | ஊற்றா யிருந்தவ ருள்ளம் ஆற்றியும், |
| | ஆறலைக் கள்வ ரறுபகை மீறில் |
| | உறுதுணை யாயவர் நெறிமுறை காத்தும், |
| | முயற்சியாம் வழியி லயர்ச்சி நேரிடில் |
| 95. | ஊன்றுகோ லாயவ ரூக்க முயர்த்தியும் |
| | இவ்விதம் யாரையுஞ் செவ்விதிற் படுத்தி, |
| | இகத்துள சுகத்திற்கு அளவுகோ லாகி, |
| | பரத்துள சுகத்தை வரித்தசித் திரமாய், |
| | இல்லற மென்பதன் நல்லுயிரே யாய், |
| 100. | நின்ற காதலின் நிலைமை, நினையில், |
| | இரும்பும் காந்தமும் பொருந்துந் தன்மைபோல் |
| | இருவர் சிந்தையு மியல்பா யுருகி |
| | யொன்றாந் தன்மை யன்றி, ஒருவரால் |
| | ஆக்கப் படும்பொரு ளாமோ? |
| 105. | வீக்கிய கழற்கால் வேந்தர் வேந்தே ! | 8 |
| | |
| ஜீவ. | | ஆமோ வன்றோ யாமஃ தறியேம். |
| | பிஞ்சிற் பழுத்த பேச்சொழி. மிஞ்சலை. |
| | மங்கைய ரென்றுஞ் சுதந்தர பங்கர். |
| | பேதையர். எளிதிற் பிறழ்ந்திடு முளத்தர். |
| 110. | முதியவுன் றந்தை மதியிலுன் மதியோ |
| | பெரிது?மற் றவர்தமி லுன்னயம் பேண |
| | உரியவர் யாவர்? ஓதிய படியே |
| | பலதே வனுக்கே யுடன்படல் கடமை. |
| | |
| வாணி. | | இல்லையெனில்? - |
| | |
| ஜீவ. | | கன்னியா யிருப்பா யென்றும். |
| | |
| வாணி. | 115. | சம்மதம். |
| | |
| ஜீவ. | | கிணற்றிலோர் மதிகொடு சாடில் |
| | எம்மதி கொண்டுநீ யெழுவாய்? பேதாய் ! |
| | கன்னியா யிருக்கி லுன்னழ கென்னாம்? |
| | அரைக்கி லன்றோ சந்தனங் கமழும்? |