| வாணி. | | விரைதரு மோசிறு கறையா னரிக்கில்? |
| | |
| ஜீவ. | 120. | நனே பிடித்த முயற்கு மூன்றுகால் |
| | ஆனா லெங்ஙனம்? |
| | |
| வாணி. | | அரிவையர் பிழைப்பர்? |
| | (சேடி வர) |
| | |
| சேடி. | | சுந்தர முனிவர் வந்தனர் வாயிலில். |
| | கால நோக்கினர். |
| | |
| ஜீவ. | | சாலவு மினிதே. |
| | ஆசனங் கொணர்தி. |
| | |
| (வாணியை நோக்கி) | | யோசனை வேண்டாம். |
| 125. | எப்படி யாயினுஞ் சகடர் சொற்படி |
| | நடத்துவம் மன்றால், நன்குநீ யுணர்தி. |
| | ஆயினுந் தந்தன மைந்துநாள். |
| | ஆய்ந்தறி விப்பாய் வாய்ந்தவுன் கருத்தே. | 9 |
| | |
| வாணி, | | இறக்கினு மிறைவ ! அதற்கியா னிசையேன். |
| 130. | பொறுத்தருள் யானிவண் புகன்ற |
| | மறுத்துரை யனைத்தும் மாற்றல ரேறே. | 10 |
| | (சுந்தர முனிவர் வர) |
| | |
| ஜீவ. (முனிவரைத் | | வணங்குது முன்றன் மணங்கமழ் சேவடி, |
| தொழுது) | | இருந்தரு ளுதியெம் மிறைவ ! |
| | பரிந்துநீ வந்ததெம் பாக்கியப் பயனே. | 11 |
| | |
| சுந்தர, | 135. | தீதிலை யாதும்? க்ஷேமமே போலும். |
| | |
| (மனோன்மணியை | | ஏதோ மனோன்மணி ! ஓதாய் |
| நோக்கி) | | வேறுபா டாய்நீ விளங்கு மாறே. | 12 |
| | |
| மனோன்மணி. | | கருணையே யுருவாய் வருமுனீ சுரரே ! |
| (வணங்கி) | | எல்லா மறியுமும்பாற் |
| 140. | சொல்ல வல்லதொன் றில்லை. சுகமே. | 13 |
| | |
| செவிலி, | | கரும்பே ! யாங்கள் விரும்புங் கனியே ! |
| (மனோன்மணியை | | முனிவர் பாலுநீ யொளிப்பையே லினியிங்கு |
| நோக்கி) | | யார்வயி னுரைப்பாய் ! ஐயோ ! இதுவென்? |