| (முனியை நோக்கி) | | ஆர்வமு ஞானமு மணிகல னாக்கொள் |
| 145. | தேசிக வடிவே ! செப்புமா றறிகிலம் |
| | மாசறு மனோன்மணி தன்னுரு மாறி |
| | நேற்றிரா முதலாத் தோற்றுந் தோற்றம். |
| | மண்ணாள் மேனியும் ; உண்ணா ளமுதும் ; |
| | நண்ணா ளூசலும் ; எண்ணாள் பந்தும் ; |
| 150. | முடியாள் குழலும் ; படியா ளிசையும் ; |
| | தடவாள் யாழும் ; நடவாள் பொழிலும் ; |
| | அணியாள் பணியும் ; பணியா ளேவலும் ; |
| | மறந்தாள் கிளியும் ; துறந்தா ளனமும் ; |
| | தூங்குவள் போன்றே யேங்குவள் ; எளியை ! |
| 155. | நோக்குவள் போன்றே நோக்குவள் வெளியை ; |
| | கேட்டுங் கேட்கிலள் ; பார்த்தும் பார்க்கிலள் ; |
| | மீட்டுங் கேட்பள் ; மீட்டும் பார்ப்பள் ; |
| | தனியே யிருப்பள் ; தனியே சிரிப்பாள் ; |
| | விழிநீர் பொழிவள் ; மெய்விதிர்த் தழுவள் ; |
| 160. | இங்ஙன மிருக்கி லெங்ஙன மாமோ? |
| | வாணியும் யானும் வருந்திக் கேட்டும் |
| | பேணி யிதுவரை யொருமொழி பேசிலள். |
| | அரசன் கேட்டு முரைத்திலள். அன்பாய் |
| | முனிவ!நீ வினவியும் மொழியா ளாயின் |
| 165. | எவருட னினிமே லிசைப்பள்? |
| | தவவுரு வாய்வரு தனிமுதற் சுடரே ! | 14 |
| | |
| சுந்தர, (ஜீவகனை | | குழவிப் பருவ நழுவுங் காலை |
| நோக்கி) | | களிமிகு கன்னிய ருளமும் வாக்கும் |
| | புளியம் பழமுந் தோடும் போலாம். |
| 170. | காதல் வெள்ளங் கதித்துப் பரந்து |
| | மாத ருள்ளம் வாக்கெனு நீண்ட |
| | இருகரை புரண்டு பெருமூச் செறியில், |
| | எண்ண மெங்ஙன நண்ணு நாவினை? |
| | தாதா அன்பு போதா தாகுங் |
| 175. | காலங் கன்னியர்க் குளதெனும் பெற்றி |
| | சாலவும் மறந்தனை போலும். தழைத்துப் |