பக்கம் எண் :

மனோன்மணீயம்
29

படர்கொடி பருவம் அணையில், நட்ட
இடமது துறந்துநல் லின்ப மெய்த
அருகுள தருவை யவாவும், அடையின்
180.முருகவிழ் முகையுஞ் சுவைதரு கனியும்
அகமகிழ்ந் தளித்து மிகவளர்ந் தோங்கும்.
இலையெனி னலமிழந் தொல்கும். அதனால்
நிசிதவே லரசா டவியில்
உசிதமா மொருதரு விரைந்துநீ யுணரே. 15
ஜீவ. 185.எங்குல குருவே ! இயம்பிய தொவ்வும்.
எங்குள திக்கொடிக் கிசைந்த
பொங்கெழில் பொலியும் புரையறு தருவே?
சுந்தர, உலகுள மற்றை யரசெலா நலமில்
கள்ளியுங் கருவேற் காடுமா யொழிய,
190. ஜகமெலாந் தங்க நிழலது பரப்பித்
தொலைவிலாத் துன்னலர் வரினு மவர்தலை
யிலையெனும் வீரமே யிலையாய்த் தழைத்து,
புகழ்மணங் கமழுங் குணம்பல பூத்து,
துனிவரு முயிர்க்குள துன்பந் துடைப்பான்
195.கனியுங் கருணையே கனியாக் காய்த்து,
தருமநா டென்னு மொருநா மங்கொள்,
திருவாழ் கோடாஞ் சேரதே சத்துப்
புருடோத் தமனெனும் பொருவிலாப் புருடன்,
நீங்கி லில்லை நினது
200..பூங்கொடி படரப் பாங்காந் தருவே. 17
ஜீவ. நல்லது ! தேவரீர் சொல்லிய படியே,
இடுக்கண் களைந்த விறைவ !
நடத்துவன் யோசனை பண்ணி நன்றே. 18
சுந்தர, யோசனை வேண்டிய தன்று, நடேசன்
205.என்றுள னொருவன். ஏவில்,
சென்றவன் முடிப்பன் மன்றல் சிறக்கவே.