பக்கம் எண் :

காட்சி-3]மனோஹரன்121

பௌ. ஆம், ஆம் !  இதுதான் சமயம், வாருங்கள் !  வாருங்கள் ! 

ம. ஜெய ! 

எல்லோரும்.

ஜெய. ஜெய !              [எல்லோரும் போகிறார்கள். ] 


            காட்சி முடிகிறது. 



மூன்றாவது காட்சி.

இடம்- மஹாராஜாவின் சபை.     காலம்-காலை.

இடையில் ஓர் திரை யிடப்பட்ட சேர தேசத்துச் சிங்காதனத்தின்மீது

ஒரு புறம் புருஷோத்தமராஜனும் மற்றொருபுறம்

பத்மாவதியும் வீற்றிருக்கின்றனர்.

விஜயாள் பத்மாவதியின் அருகில் தாதியர் புடைசூழ நிற்கிறாள்.

குரு, ரணவீரகேது, மந்திரிபிரதானிகள் சபையில் உட்கார்ந்திருக்கின்றனர்.

மனோஹரன், சத்தியசீலர், ராஜப்பிரியன், பௌத்தாயனன், நால்வரும்

முழுக்கவச மணிந்து முகத்தை மூடி, மந்திரி பிரதானிகள்

புடைசூழ வருகின்றனர்.

சபையோர்களெல்லாம் ஜெய கோஷம் செய்கின்றனர்.

பு. வீரகேசரி !  வாரும் !  என துயிரைக் காத்த வீர சிங்
கமே வாரும் !  எமது நாட்டைக் காப்பாற்றிய வீரச்
செல்வமே !  வாரும் !  தாம் எனக்கும் எனது பிரஜை
களுக்கும் செய்த உதவிக்குத் தக்க கைம்மாறு செய்ய
நான் அசக்தனா யிருக்கிறேன். ஆயினும் தாம் என்னால்
கொடுக்கத்தக்க எதையாவது கேளும், தருகிறேன்.
இந் நாடு முழுவதையுங் கேட்டபோதிலும் தருகிறேன் ! 
என துயிரை வேண்டினும் தருகிறேன் !  நீர் காத்தபடியால்
அது உம்முடையதே ! -உம்முடைய வேண்டுகோளின்படி
நானும் எனது பத்தினியுமாக, இதோ
       16