பக்கம் எண் :

122மனோஹரன்[அங்கம்-5

சிம்மாசனத்தின்மீது வீற்றிருக்கிறோம். இனி தாம்
தடையின்றி கேட்டுப் பெற்றுக்கொள்ளவேண்டும்.

ம.சிங [ சிங்காதனத் தெதிரிற் போய் முழந்தாளிட்டுப் பணிகிறான். ] 

பு. வீரகேசரி !  இதென்ன? என் முன்பாக முழந்தா ளிடுகிறீரே?

ம. மஹாராஜா !  நான் இவ்வுலகில் எதை முக்கியமாகப்
பெறவிரும்பினேனோ அதைப் பெற்றேன், இனி எனக்கு
வேறொன்றும் வேண்டியதில்லை ! -அம்மணி !
                         [ முகத்தின் மூடியை எடுத்து ]

நான் அன்றுசெய்தசபதத்தை நிறைவேற்றினேனன்றோ?

ப. [எழுந் தோடி மனோஹரனைக் கட்டியணைத்து ]  கண்ணே ! நிறை
வேற்றினை !  நிறைவேற்றினை ! 

விஜ. பிராணநாதா !  பிராணநாதா ! 
                        [மனோஹரனைக் கட்டிக்கொள்ளு
                            கிறாள். ]  

எல்லோரும். மனோஹரர் !  மனோஹரர் ! 

பு. [ சிங்காதனத்தினின்றும் இழிந்து மனோஹரனைக் கட்டியணைத்து ] 
நான் கனவு காணவில்லையே !  இல்லை, இல்லை ! -கண்ணே ! 
மனோஹரா !  மனோஹரா  !  இன்றே உன்னைப் பெற்றேன் ! 
இன்றே உன்னைப் பெற்றேன் !
                  [சத்தியசீலர், ராஜப்பிரியன்
                     பௌத்தாயனன் மூவரும் தங்கள்
                     தங்கள் முக மூடியைக் களைகின்றனர்.
                     சபையோரெல்லாம் சந்தோஷத்தால்
                     ஆரவாரிக்கின்றனர். ] 

பு. சத்தியசீலரே !  ராஜப்பிரியா !  பௌத்தாயனா ! -
இதென்ன எனக்குப் பயித்தியம் பிடிக்கும்போலிருக்கிறதே ! 
-என்ன ஆச்சர்யம்-மனோஹரா !  நீயோ எனதுயிரைக்
காப்பாற்றிய வீரகேசரி? ஆம் ஆம் !  உன்னையன்றி
வேறெந்த வீரன் அச்செய்கை செய்திருப்பான்? கண்ணே 
!  நான் உனக்குச் செய்த தீங்கிற்