பக்கம் எண் :

காட்சி-3]மனோஹரன்123

கெல்லாம் என்ன கைம்மாறு செய்தனை !  சத்தியசீலரே ! 
அப்பொழுதே நீங்களின்னாரென ஏன் எனக்குக் கூறி
யிருக்கலாகாது?-ராஜப்பிரியா !  நீயாவது என்னிடம்
கூறியிருக்க லாகாதா?

விஜ. மாமா, நான் அப்பொழுதே சொன்னேனே
கேட்டீர்களா? எப்படியும் பிராணநாதர் வந்து நமக்கு உதவி
செய்வாரெனச் சொல்லவில்லையா?-பார்த்தீரா மாமி,
இறந்துவிட்டார் இறந்து விட்டார் என்று வருந்திக்
கொண்டிருந்தீர்களே !  எனக்கு இப்பொழுது இறப்பதில்
லையென வாக்களித்துவிட்டு இறப்பாரோ ?

ப. கண்ணே, உண்மையே, உன் புத்தியைக் கேட்பானேன் ! 

பு. என்ன ஆச்சரியம் ! -ஏதோ என் முன்னோர்களுடைய
பூர்வ புண்யபலனே இது. என் மனைவியாகிய கற்பிற்கரசி
பத்மாவதியை நேரிற் காணப்பெற்றேன் !  என் மைந்தனாகிய
மனோஹரனும் வந்து சேர்ந்து விட்டான். மந்திரிகளுக்குள்
நாயகம் போன்ற சத்தியசீலரும் உயிர் பிழைத் திருக்கப்
பெற்றேன். ராஜப்பிரியன் முதலிய எல்லோரும் என்னை
அடைந்துவிட்டனர், இனி இவ்வுலகில் நான் பெறத்தக்க
தென்ன இருக்கிறது?

ப. ஈசன் அருள் !  


                  காட்சி முடிகிறது.


                  நாடகம்முற்றியது


Printed by Dowden & co., at the “Peerless Press” Madras.