பக்கம் எண் :

94குறள் காட்டும் காதலர்

உறாஅ தவர்க்கண்ட
கண்ணும் அவரைச்

செறாஅர்எனச் சேறிஎன் நெஞ்சு! (குறள், 1292)

துன்பத்தால் கெட்டு நொந்தவர்களை உலகத்தில் உறவினர்களும்
நண்பர்களும் கைவிட்டு ஒதுங்குவார்கள். அதை
நினைத்துக்கொள்கிறாள் அவள். காதலனைப் பிரிந்து துன்புற்ற
காரணத்தால் நெஞ்சம் மெலிந்துவிட்டது: திக்கற்ற நிலையில் வாடியது.
அதனால் காதலனைக் கண்டவுடனே அவருடைய விருப்பப்படி
அவர்பின் சென்று விட்டதோ என்று எண்ணிக் கேட்கிறாள்.

கெட்டார்க்கு நட்டார்இல்
என்பதோ நெஞ்சேநீ

பெட்டாங்கு அவர்பின் செலல். (குறள், 1293)