பக்கம் எண் :

152சத்திய சோதனை

Untitled Document
இருக்க  வேண்டிய பொறுப்பு,  அவர்களுக்கு மேலும் அதிகமாகிறது.

     சுற்றிலும் இருந்த ஆங்கிலேயருடன் ஒப்பிட்டுப் பார்த்தால் நம்
மக்களின்     பழக்கங்கள்,   சுகாதாரக் குறைவாக    இருந்ததைக்
கவனித்திருந்தேன். ஆகையால், அதை அங்கே கூடியிருந்தவர்களின்
கவனத்திற்குக்    கொண்டுவந்தேன்.   ஹிந்துக்கள்,   முஸ்லிம்கள்,
பார்ஸிகள், கிறிஸ்தவர்கள், குஜராத்திகள், மதராஸிகள்,  பஞ்சாபிகள்,
சிந்திகள், கச்சிக்காரர்கள், சூரத்காரர்கள்   என்றெல்லாம்  இருக்கும்
பாகுபாடுகளையெல்லாம் மறந்துவிட வேண்டியதன்  அவசியத்தையும்
வற்புறுத்தினேன்.    முடிவாக,  மற்றொரு யோசனையும்  கூறினேன்.
குடியேறியிருக்கும்     இந்தியரின்     கஷ்டங்களைக்   குறித்துச்
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு  முறையிட்டுக் கொள்ளுவதற்கு ஒரு
சங்கத்தை        அமைத்துக்  கொள்ளவேண்டும்      என்றேன்.
அச்சங்கத்திற்குச்     சாத்தியமான அளவுக்கு   என் நேரத்தையும்
சேவையையும்  அளிக்க     நான்  தயாராக இருக்கிறேன் என்றும்
அறிவித்தேன்.

     என்னுடைய    சொற்பொழிவு அங்கே   கூடியிருந்தவர்களின்
மனத்தை நன்கு கவர்ந்தது என்பதைக் கண்டேன்.

     என்     பேச்சைத்  தொடர்ந்து  விவாதம் நடந்தது. எனக்கு
வேண்டிய      விவரங்களையும்  சேகரித்துக் கொடுப்பதாகச் சிலர்
முன்வந்தனர்.        இது எனக்கு  உற்சாகத்தை  அளித்தது. என்
சொற்பொழிவைக்     கேட்டவர்களில்  மிகச் சிலருக்கே ஆங்கிலம்
தெரியும்     என்பதையும்    அறிந்தேன்.  அந்நாட்டில் ஆங்கிலம்
தெரிந்திருப்பது    பயனுள்ளதாக இருக்கும் என்று நான் கருதியதால்
அவகாசம் இருப்பவர்கள் ஆங்கிலம் கற்றுக் கொள்ளுமாறு யோசனை
கூறினேன்.   அதிக வயதாகிவிட்ட    பிறகும்கூட ஒரு  மொழியைக்
கற்றுக்கொண்டு விடுவது சாத்தியமே என்று நான்    அவர்களுக்குச்
சொன்னதோடு, அப்படிக்   கற்றுக்கொண்ட        சிலரைப்பற்றியும்
உதாரணமாக             எடுத்துக் கூறினேன்.  அதைச் சொல்லிக்
கொடுப்பதற்கென்று      ஒரு வகுப்பை ஆரம்பித்தால் அதில் வந்து
போதிக்கிறேன்   என்றேன்.  தனிப்பட்டவர்கள்          யாராவது
அம்மொழியைக்      கற்றுக்கொள்ள விரும்பினால் நானே அவர்கள்
வீட்டுக்குப் போய்ச்    சொல்லிக்கொடுக்க தயார் என்றும் கூறினேன்.

     இம்மொழியைப்            போதிக்க    வகுப்பு   எதுவும்
ஆரம்பிக்கப்படவில்லை. ஆனால், தங்களுக்கு இருக்கும் வசதியைப்
பொறுத்துக் கற்றுக்கொள்ளத் தாங்கள்  தயாராய் இருப்பதாக மூன்று
இளைஞர்கள் அறிவித்தனர். இதற்கு அவர்கள் விதித்த  நிபந்தனை,
அவர்களுடைய      இடத்திற்கு நான் போய்ப் போதிக்க வேண்டும்
என்பது. அவர்களில் இருவர்       முஸ்லிம்கள் - ஒருவர் நாவிதர்;
மற்றொருவர் குமாஸ்தா; - மூன்றாமவர் ஹிந்து. இவர் ஒரு சில்லரைக்
கடைக்காரர். அவர்களுடைய     சௌகரியப்படி போய்ச் சொல்லிக்