பக்கம் எண் :

174சத்திய சோதனை

Untitled Document
தனிப்பட்டவர்களுக்காக நீங்கள் செய்யும் வக்கீல் வேலைக்கு, நீங்கள்
தனியாகக்     கட்டணம் பெற்றுக் கொள்ளலாம்”   என்று அவர்கள்
கூறினர்.

     “அது முடியாது. பொதுஜன ஊழியத்திற்கு   உங்களிடம் பணம்
வாங்க முடியாது. இந்த வேலைக்குப் பாரிஸ்டர் என்ற வகையில் என்
திறமை அதிகமாகத்    தேவையில்லை.  உங்களையெல்லாம் வேலை
செய்யும்படி     செய்வதே முக்கியமாக  என் வேலையாக இருக்கும்.
அப்படியிருக்க, இந்த வேலைக்கு உங்களிடம்    எப்படி நான் பணம்
வாங்க  முடியும்? மேலும் இந்த வேலைக்குப் பண உதவி செய்யுமாறு
உங்களிடம் நான்    அடிக்கடி கேட்டுக்கொள்ள வேண்டிவரும். என்
சொந்தச் செலவுக்கும் உங்களிடமிருந்து    நான் பணம் வாங்குவதாக
இருந்தால்     பெருந்தொகை  கொடுக்கும்படி  உங்களைக் கேட்பது
எனக்குச் சங்கடமாக இருக்கும்.    முடிவாக,  அதனால் நம் வேலை
நின்றுவிடும்  நிலைக்கு வந்துவிடுவோம். இத்துடன் பொது வேலைக்கு
ஆண்டுக்கு 300 பவுனுக்கு மேல்         நம் சமூகம் பணம் திரட்ட
வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன்” என்று கூறினேன்.

     “கொஞ்ச காலமாக   உங்களுடன் பழகி    உங்களை நன்றாக
நாங்கள்       அறிந்து கொண்டிருக்கிறோம்.  உங்களுக்குத் தேவை
இல்லாதது எதையும் நீங்கள்    பெற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்பது
எங்களுக்கு நிச்சயமாகத் தெரியும். நீங்கள் இங்கே இருக்க வேண்டும்
என்று நாங்கள் விரும்பும்போது உங்கள் செலவுக்கு  நாங்கள் ஏற்பாடு
செய்ய வேண்டாமா?” என்றும் கேட்டார்கள்.

     அதற்கு நான் கூறியதாவது: ‘நீங்கள் என்னிடம் கொண்டிருக்கும்
அன்பும், இப்பொழுது உங்களுக்கு    இருக்கும் உற்சாகமுமே நீங்கள்
இவ்விதம்    பேசும்படி செய்கின்றன.     இந்த அன்பும் உற்சாகமும்
எப்பொழுதும்    இப்படியே இருந்து வரும் என்று    நாம் எவ்விதம்
நிச்சயமாக       நம்ப முடியும்?   உங்கள் நண்பன், ஊழியன் என்ற
வகையில், சில சமயங்களில்        உங்களை நான் கடிந்து பேசவும்
நேரலாம். அப்பொழுதும் என்னிடம் நீங்கள்  அன்புடையவர்களாகவே
இருப்பீர்களா என்பது       கடவுளுக்குத்தான் வெளிச்சம். ஆனால்,
உண்மை என்னவெனில், பொது வேலைக்காக நான் சம்பளம்  எதுவும்
வாங்கிக்        கொள்ளக்கூடாது என்பதுதான்.  நீங்கள் எல்லோரும்
உங்களுக்கு இருக்கும்    சட்ட வேலையை என்னிடம் ஒப்படைத்தால்
இதுவே     எனக்குப் போதுமானது.      அதுவும்கூட உங்களுக்குக்
கஷ்டமானதாக இருக்கலாம். நான்  வெள்ளைக்காரப் பாரிஸ்டர் அல்ல.
கோர்ட்டு    என்னை மதிக்கும் என்று நான்    எப்படி நிச்சயமாகக்
கூறமுடியும்? வக்கீல் தொழிலில் நான் எவ்வளவு தூரம்   திறமையாக
நடந்து கொள்ளுவேன் என்பதும்