பக்கம் எண் :

பிரம்மச்சரியம் - 2251

Untitled Document
பிரம்மச்சரியம்,    ஒரு கடுமையான தவமுறையாக எனக்கு  இல்லை.
ஆறுதலையும்,     ஆனந்தத்தையும் எனக்கு  அளிப்பதாகவே அது
இருந்தது. ஒவ்வொரு நாளும் அதில் ஒரு புதிய அழகைக் கண்டேன்.

     தினந்தோறும் ஆனந்தத்தை அதிகமாக்கும் விஷயமாகவே அது
இருந்தாலும், அது எனக்கு   எளிதாக இருந்துவிட்டது என்று யாரும்
எண்ணிவிட வேண்டாம். எனக்கு      ஐம்பத்தாறு வயது ஆகிவிட்ட
பிறகும்கூட, அது       எவ்வளவு    கஷ்டமான காரியம் என்பதை
அறிகிறேன்.       கத்தியின் முனைமீது நடப்பதைப் போன்றது அது
என்பதை,            ஒவ்வொரு நாளும் மேலும் மேலும் அதிகமாக
உணருகிறேன்.   என்றைக்குமே விழிப்புடன் இருந்து வர வேண்டியது
அவசியம் என்பதையும் காண்கிறேன்.

     இந்த விரதத்தை அனுசரிப்பதில் அவசியமான   முதல் காரியம்,
ருசி உணர்ச்சியை அடக்குவதாகும். ருசியை முற்றும் அடக்கி விடுவது,
பிரம்மச்சரிய விரதத்தை  அனுசரிப்பதை எளிதாக்கி விடுகிறது என்று
கண்டேன். ஆகவே, சைவ உணவுக்காரன் என்ற வகையில் மாத்திரம்
அன்றி     பிரம்மச்சாரி      என்ற    வகையிலும் எனது உணவுப்
பரிசோதனைகளை          மேற்கொண்டும் நடத்தலானேன். இந்தச்
சோதனைகளின் பலனாக, பிரம்மச்சாரியின்    உணவு, ஓர் அளவுக்கு
உட்பட்டதாகவும், எளிமையானதாகவும்,      மசாலை முதலியவைகள்
கலக்காத தாகவும், சாத்தியமானால்    சமைக்கப்படாததாகவும் இருக்க
வேண்டும் என்பதைக் கண்டேன்.

     பிரம்மச்சாரிக்கு ஏற்ற சிறந்த உணவு,   பழங்களும் கொட்டைப்
பருப்பு வகைகளுமே என்பதை   ஆறு வருட அனுபவத்தில் அறிந்து
கொண்டேன்.           இத்தகைய ஆகாரம் மாத்திரமே சாப்பிட்டுக்
கொண்டிருந்தபோது,       சிற்றின்ப இச்சை இல்லாத நிலையை நான்
அனுபவித்ததைப்போல் அந்த உணவை      மாற்றிவிட்ட பிறகு நான்
அனுபவித்ததில்லை. தென்னாப்பிரிக்காவில் பழங்களையும் கொட்டைப்
பருப்புகளையும்     மாத்திரமே நான்          புசித்து வந்தபோது,
பிரம்மச்சரியத்திற்கு            என் அளவில் எந்தவித முயற்சியும்
தேவைப்படவில்லை.  ஆனால் நான் பால் சாப்பிட ஆரம்பித்த பிறகு
அதிக முயற்சியின் பேரிலேயே           பிரம்மச்சரிய விரதத்தைக்
காக்கவேண்டியிருந்தது. என் பழ ஆகாரத்திலிருந்து  திரும்பவும் பால்
சாப்பிட வேண்டிய நிலைமை   எப்படி ஏற்பட்டது என்பதைக் குறித்து
அதற்கு உரிய இடத்தில்        பிறகு கவனிப்போம்.  பால் ஆகாரம்
பிரம்மச்சரிய விரதத்தை     அதிகக் கஷ்டமானதாக்குகிறது என்பதை
மாத்திரம் இங்கே            சொன்னால் போதுமானது. இதிலிருந்து
‘பிரம்மச்சாரிகளெல்லாம்    பால் சாப்பிடுவதை விட்டுவிட வேண்டும்’
என்ற     முடிவுக்கு யாரும்    வந்துவிட வேண்டாம். பலவகையான
ஆகாரங்களும், பிரம்மச்சரியத்தை எவ்விதம் பாதிக்கின்றன என்பதை,
அநேக சோதனைகளின் பிறகே     முடிவு செய்ய முடியும். பாலைப்