பக்கம் எண் :

மறக்கமுடியாத அந்த வாரம்! - 1559

Untitled Document
வில்லை. நீங்கள் வந்தால்தான் அதைச் செய்யமுடியும்” என்றார்கள்.

     நான் மோட்டாரில் ஏறினேன்.          பைதுனிக்கு அருகில்
பெருங்கூட்டம் கூடியிருந்ததைக் கண்டேன்.    என்னைக் கண்டதும்
மக்கள் ஆனந்தத்தால் பைத்தியம்       கொண்டவர்களைப் போல்
ஆகிவிட்டனர். உடனேயே       ஓர் ஊர்வலமும் உருவாகிவிட்டது.
“வந்தே மாதரம்” “அல்லாஹோ அக்பர்” என்ற கோஷங்கள் வானை
அலாவி   ஒலித்தன. பைதுனியில் குதிரைப் போலீஸ் படை ஒன்றைக்
கண்டோம். மேலிருந்து கற்கள்             சரமாரியாகப் பொழிந்து
கொண்டிருந்தன. அமைதியாக இருக்கும்படி கூட்டத்தினரைக் கேட்டுக்
கொண்டேன். ஆனால், கற்கள் மாரியிலிருந்து நாங்கள் தப்ப முடியாது
என்றே தோன்றியது. ஊர்வலம்       அப்துர் ரஹ்மான் தெருவைத்
தாண்டிக் கிராபோர்டு        மார்க்கெட்டை நோக்கிப்போக இருந்த
சமயத்தில், திடீரென்று குதிரைப் போலீஸ்    படையொன்று எதிர்த்து
நின்றது. ஊர்வலம்       கோட்டையை நோக்கி மேலும் போகாதபடி
தடுக்கவே       அப்படை அங்கே இருந்தது.    கூட்டமோ அதிக
நெருக்கமானது. போலீஸ் அணியைப்    பிளந்து கொண்டும் கூட்டம்
புகுந்துவிட்டது என்றே         சொல்லவேண்டும். அப்படிப் பட்ட
பிரம்மாண்டமானதோர் கூட்டத்தில் என்   குரல் கேட்பதற்கு இடமே
இல்லை. இப்படிப்பட்ட நிலைமையில்  குதிரைப் படைக்குத் தலைமை
வகித்த அதிகாரி, கூட்டத்தைக் கலைக்கும்படி    அப்படையினருக்கு
உத்தரவிட்டார். உடனே குதிரை வீரர்கள்  தங்களுடைய ஈட்டிகளை
வீசிய வண்ணம் கூட்டத்தினரைத் தாக்கினர்.   நானும் காயமடைந்து
விடுவேன் என்று ஒரு கணம் தோன்றியது. ஆனால், நான் பயந்தபடி
ஆகிவிடவில்லை.      குதிரை வீரர்கள்   வேகமாகச் சென்றபோது
அவர்கள் ஈட்டி எங்கள்           மோட்டார்மீதுதான் உராய்ந்தது.
ஊர்வலத்தில் மக்களின் வரிசையெல்லாம் சின்னாபின்னமாகி விட்டன.
கூட்டத்தில் எங்கும் ஒரே        குழப்பநிலை. பிறகு மக்கள், ஓடத்
தொடங்கிவிட்டனர். சிலர், குதிரை, மக்கள்   இவர்களின் காலடியில்
மிதிபட்டுப் போயினர்.       மற்றவர்களோ,           நசுக்குண்டு
காயப்பட்டுவிட்டனர். எங்கும்                 ஒரே ஜன மயமான
அக்கூட்டத்திற்கிடையே குதிரைகள் போவதற்கே இடமில்லை. மக்கள்
கலைவதென்றால், அவர்கள்       வெளியேறுவதற்கும் வழியில்லை.
ஆகவே, ஈட்டி வீரர்கள் கண்மூடித்தனமாகக் கூட்டத்திற்குள் புகுந்து
சென்றனர். தாங்கள் செய்தது     இன்னது என்பது அவர்களுக்குத்
தெரியுமா என்பதே எனக்குச் சந்தேகம்.      அங்கிருந்த நிலைமை
முழுவதுமே மிகவும் பயங்கரமான காட்சியாக இருந்தது. வெறிபிடித்த
குழப்பத்தில் குதிரை வீரர்களும் மக்களும் ஒன்றாகக் கலந்து போய்
விட்டனர்.

     இவ்வாறு கூட்டத்தைக் கலைத்து       அது மேற்கொண்டும்