பக்கம் எண் :

மகத்தான கண்காட்சி95

Untitled Document
ஒருவன் போய் விடுவானாயின்,    வெளியிலுள்ள  சப்தங்களையும்
சந்தடிகளையும் அவன் மறந்தே போவான்.    உடனே அவனுடைய
தன்மையே மாறிவிடும். கன்னி மேரியின் சிலை முன்பு மண்டியிட்டுத்
தொழும் ஒருவனை கடந்து சென்றதுமே   அவன் கண்ணியமாகவும்
பக்தியோடும் நடந்துகொண்டு விடுவான்.      இவ்விதம் முழந்தாள்
இடுவதும், பிரார்த்தனை செய்வதும் வெறும்   மூட நம்பிக்கைகளாக
இருக்க  முடியாது.   கன்னி  மேரியின்     முன்,   பயபக்தியுடன்
மண்டியிட்டுக் கொண்டு வணங்கியவர்கள் வெறும் சலவைக் கல்லை
மாத்திரம் வணங்கியவர்களாக இருக்க முடியாது என்று அப்பொழுது
எனக்கு ஏற்பட்ட உணர்ச்சி,      அது முதலே என்னுள் வளர்ந்து
கொண்டு வந்தது. அவர்கள் கல்லை வணங்கவில்லை; உண்மையான
பக்தியால்       பரவசம் அடைந்து,  அக்கல் எதற்கு அறிகுறியாக
நின்றதோ அந்தத் தெய்வீக சக்தியையே அவர்கள் வணங்கினார்கள்.
இத்தகைய பிரார்த்தனைகளினால் அவர்கள் கடவுளின்  மகிமையை
வளர்த்தார்களேயல்லாமல்      குறைத்துவிடவில்லை     என்றும்
அப்பொழுது   எனக்குத்   தோன்றியதாக       நினைவிருக்கிறது.

     எப்பீல் கோபுரத்தைப்பற்றியும் இங்கே    ஒரு வார்த்தை கூற
வேண்டும். அந்தக் கோபுரம்       இன்று எவ்விதம் பயன்படுகிறது
என்பதுந் தெரியாது. ஆனால்,       அதைக் குறித்துப் பலர் குறை
கூறினர் என்றும், மற்றும்    பலர் போற்றினர் என்றும் அப்பொழுது
அறிந்தேன்.    அதைக்     குறை கூறியவர்களில் முக்கியமானவர்
டால்ஸ்டாய்.    எப்பீல் கோபுரம், மனிதன்  செய்யும் தவறுக்கு ஒரு
சின்னமேயன்றி அவனுடைய அறிவுக்குச்    சின்னம் அல்ல என்று
அவர் கூறினார். போதை தரும்        பொருள்களிலெல்லாம் மிக
மோசமானது புகையிலை என்று டால்ஸ்டாய் கூறினார். புகையிலைப்
பழக்கம் உள்ளவனை,    குடிகாரன்      கூடச்செய்யத் துணியாத
குற்றங்களைச் செய்துவிடும்படி       புகையிலை தூண்டிவிடுகிறது
என்றார்.   மதுபானம்    ஒருவனைப் பித்தன்  ஆக்கி விடுகிறது ;
புகையிலையோ,   அவன் புத்தியை மயக்கி,   ஆகாயக் கோட்டை
கட்டும்படி செய்கிறது என்றார். அத்தகைய மதிமயக்கத்தில் மனிதன்
சிருஷ்டிப்பவைகளில் ஒன்றே எப்பீல் கோபுரம் என்றும் டால்ஸ்டாய்
கூறினார். எப்பீல்      கோபுரத்தில் கலைத்திறன் எதுவும் இல்லை.
கண்காட்சியின்      உண்மையான அழகை இது எந்த விதத்திலும்
அதிகரித்ததாகவும்     சொல்லுவதற்கில்லை.   இதைப் பார்ப்பதற்கு
ஏராளமான       மனிதர்கள் கூடினார்கள்.   அது புதுமையாகவும்,
இணையற்ற வகையில் பெரிதாகவும் இருந்ததால்,  மனிதர்கள் அதில்
ஏறியும் பார்த்தனர். கண்காட்சியில்      அதை ஒரு விளையாட்டுப்
பொம்மை         என்றே சொல்லலாம்.      நாம் குழந்தைகளாக
இருந்துகொண்டிருக்கும்